Headlines

செல்பி மோகத்தைப் போக்க ஆன்டிசெல்பி மாத்திரைகள்

செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் (‘மிண்ட்ஸ்’ – புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது…

Read More

தீவிரவாத இயக்கமாக சிவசேனாவை அறிவிக்க வேண்டும்: முஷாரப் 

சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ‘சேனல்-92’ என்ற தனியார் தொலைகாட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த முஷாரப் கூறியதாவது: நான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுகளுடன் பழகியுள்ளேன். என்னைப்பொருத்தவரை தற்போதைய கேள்வி கட்சிகளைப் பற்றியது அல்ல. ஆனால், தனிநபர் தொடர்பானது. இந்தியாவின் தற்போதைய புதிய பிரதமர் தொடர்பானது. வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர். அவர் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். சோனியா காந்தியும் அப்படிதான். அதனால்தான், இந்தியா-பாகிஸ்தான்…

Read More

மாலைத்தீவில் அவசரநிலை பிரகடனம்

மாலைத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டது, அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய சம்பவங்களால் அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமான சூழல் நிலவி வந்தது. சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலைத்தீவு அதிபர் அப்துல்லா…

Read More

ரஷ்யாவின் மற்றுமொரு விமானம் விழுந்து பலர் பலி

சென்றவாரம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்தை தொடர்ந்து சற்றுமுன்னர் ரஷ்யாவுக்கு விமானம் ஒன்று தென் சூடானில் விழுந்ததால் அதில் பயணம் செய்த சுமார் 40 பேர் உயிரிந்துள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. பொருட்களை ஏற்றிச் செல்லும் குறிபிட்ட விமானத்தில் பணியாளர்களுடன் 20 பேர் இருந்ததாக சூடான் ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்து இருந்தாலும் நாற்பது பேரின் உடல்களை அங்கிருந்து அகற்றியதாக ராய்ட்டர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இருவர் காயங்களுடன் உயிர்தப்பி உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கடுகிறது.

Read More

நாடற்ற குழந்தைகள் குறித்து ஐநா எச்சரிக்கை

ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. வருடத்துக்கு 70,000 குழந்தைகள் நாடற்றவராக பிறப்பதாகவும், சிரியா மோதல்களால் பாதிக்கப்பட்டு, குடியேறிகளாக, அகதிகளாக மாறியவர்கள் மத்தியில் இந்த பிரச்சினை மிகவும் அதிகம் என்றும் நாடற்ற குழந்தைகளின் மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் நிராகரிக்கப்படுவதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

Read More

சிசுவை காப்பாற்றிய நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்)

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது.  வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு…

Read More

ஐ.எஸ் மீது, அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா தீர்மானம்

ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில், ‘ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள்…

Read More

இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் சிறுவன்: மீட்டுதர தாயார் வேண்டுகோள்

பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள ஒரங்கி என்ற பகுதியை சேர்ந்த ரசியா பேகம் என்பவரின் 15 வயது மகனான முகமது ரமசான், கடந்த 2008-ம் ஆண்டு வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது போபாலில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார். ரமசான் இந்தியாவில் இருப்பதை சமீபத்தில் கண்டறிந்த ரசியா பேகம், தனது மகனை பாகிஸ்தானுக்கு திரும்ப வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் ரமசானிடம் போதுமான…

Read More

சந்திரனில் கடல் : நாசா அதிர்ச்சி

சனிகிரகத்தின் சந்திரனில் கடல் இருப்பதை நாசா விண்கலம் கண்டு பிடித்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பிய ‘காசினி” என்ற விண்கலம் கிரகங்களையும், அவற்றின் சந்திரன்களையும் கண்டு பிடித்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சனிகிரகத்தின் ‘என்சி லாடஸ்” என்ற சந்திரனின் மிக அருகில் அதாவது 30 கி.மீட்டர் தொலைவில் தென்முனையில் சந்திரனின் அடிப்பகுதியில் உறைந்த நிலையில் நீராவி மற்றும் பல மூலக்கூறுகள் இருப்பதை படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2005…

Read More

ஹமாஸ், அக்ஸாவை மீட்பதில் திட்டவட்டம்

– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன முக்கிய போராட்ட அமைப்புகள் ஹமாஸ்,  பத்தாஹ் , இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள் இடையே லெபனானில் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் விவரமாவது, தற்பொழுது இஸ்ரேலுக்கு எதிராக நிகழும் பாலஸ்தீனர்களின்  மூன்றாம் கல் புரட்சிப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட்டு  பாலஸ்தீன விடுதலைக்கு போராட வேண்டும் . அந்த வெற்றி மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்டப்படுப்பதில்  இருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்  புனித…

Read More

316 ஆசனங்களை வாரிச் சுருட்டியது எர்துகானின் கட்சி

துருக்கியில் ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானினால் உருவாக்கப்பட்ட ஆளும் ஏ.கே. கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளது. தனது கட்சி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி எதிர்துகான் வாக்குறுதி அளித்துள்ளார். துருக்கியின் ஆட்சியாளர்கள் துருக்கியை சீரழித்து கொண்டிருந்த நிலையில் நிண்ட காலத்திர்கு பிறகு துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அவர்கள் மீண்டும் துருக்கியில் ஒரு இஸ்லாமிய சூழலை உருவாக்கினார் ரஜப் எர்துகான் அதிபராக உயர்ந்து விட்டாலும்…

Read More

ஒரு குழந்தை கொள்கையை கைவிடும் சீனா

சீனாவில் 1979-முதல் பின்பற்றப்பட்டு வந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. அந்நாட்டில் ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே சில மாகாணங்கள் இந்த கொள்கையை தளர்த்தி உள்ளன. இந்த கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள். ஆரோக்கியமான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக்கு…

Read More