Headlines

பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தா?

பாரீஸ் நகரில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தை விட  ஜனாதிபதி மீது அளவுகடந்த கோபமே மேலோங்கி இருப்பதாக சுவிஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பலியாகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சுவிஸில் வெளியாகும் SonntagsZeitung என்ற பத்திரிகை பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேவின்…

Read More

பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி; உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

பிரான்ஸ் தலை­ந­க­ரான பாரிஸில் கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து உலக பொரு­ளா­தாரம் பாரிய பின்­ன­டைவை சந்­திக்கும் என பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இந்த தாக்­குதல் கார­ண­மாக ஐரோப்­பாவின் சுற்­று­லாத்­துறை பாரிய வீழ்ச்­சியை சந்­திக்க கூடிய சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது. பாரிஸ் நகரம் ஆயுததாரி­க­ளின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னதை தொடர்ந்து ஐரோப்­பாவில் மேலும் பல நக­ரங்­க­ள் பயங்­க­ர­வா­தி­களின் தாக்குதலுக்கு இலக்­காக கூடும் என்று இரா­ணுவ உள­வுப்­பி­ரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐரோப்பா நோக்கி…

Read More

ஐ.எஸ். களுக்கு எதிராக மாபெரும் சைபர் தாக்குதல்: இணையப் போராளிகள் எச்சரிக்கை

பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள் மற்றும் ஹேக்கர்களின் குழு யூடியூப் வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல மூலைகளிலும் செயல்பட்டுவரும் இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் முகத்தில் ‘கய் ஃபாக்ஸ்’ முகமூடியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘உங்களுக்கு எதிரான மாபெரும்…

Read More

பரபரப்பான சூழ்நிலையில் ஒபாமா – புதின் திடீர் சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புதினும் திடிரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள்…

Read More

முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல்

சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க்ம் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ்…

Read More

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் 80000 ரசிகர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞன் 

பிரான்ஸில் நடை பெற்றுள்ள குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் பிரான்ஸை மட்டும் இன்றி உலகயே உலுக்கியிருக்கிறது. மனிதாபிமானம் உள்ள அனைத்து தலைவர்களும் மனிதர்களும் இந்த கொடுஞ்செயலை கண்டித்துள்ளனர். குறிப்பாக இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதையும் இந்த செயலில் இறங்கியதாக கூறபடும் சிலர்கள் தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டியிருந்தாலும் இஸ்லாம் இது போன்ற கொடுஞ்செயலை ஏற்று கொள்ள வில்லைஎன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நிகழ்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள விளக்கங்களில் தெளிவாக விளக்கியுள்ளனர். முஸ்லிம், மனிதேயம் மிக்கவன்….

Read More

கனடாவில் பள்ளி வாயலுக்கு தீ வைப்பு

கனடாவின் தலைநகரிலுள்ள “மஸ்ஜிதுல் ஸலாம்” எனும் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிவாசலினுள் எவரும் தங்கியிருக்கவில்லை. எனினும் இந்த தீ வைப்பு சம்பவத்தினால் பள்ளிவாசல் உடமைகள் முற்றாக எரிந்து விட்டதாகவும், இதன்மூலம் பள்ளிவாசலுக்கு சுமார் 12 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர். தீ வைப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் இது “பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக” இருக்கலாம் என பள்ளிவாசல் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

Read More

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 348 தொகுதிகளை கைப்பற்றி ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில்…

Read More

நிறவெறி கொண்ட Apple Store ஊழியர்கள் (video)

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பின மாணவர்கள் அவமதிக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலானதையடுத்து ஆப்பிள் நிறுவனம் அச்சிறுவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மேரிபைர்னாங் பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடை ஒன்றிற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மாணவர்கள் 6 பேர் கடந்த செவ்வாய் அன்று சென்றுள்ளனர். அப்போது, கருப்பின மாணவர்களை நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு “நீங்கள் உள்ளே இருந்தால், மற்றவர்களுக்கு நீங்கள் ஏதாவது திருடிவிடுவீர்களோ என்ற அச்சம் இருக்கும்” என்று…

Read More

ஆங் சான் சூகி அதிபர் பதவி ஏற்பதில் சிக்கல்

மியான்மரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா, வங்காள தேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு மியான்மர். முன்பு இது பர்மா என்று அழைக்கப்பட்டது. பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். சீனர்கள் 3 சதவீதம் பேரும், இந்தியர்கள் 2 சதவீதம் பேரும் வசிக்கிறார்கள். 2014 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மொத்த மக்கள் தொகை 5 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் பேர் ஆகும். ஆங்கிலேயர்களின்…

Read More

மியன்மார் தேர்தல்: தோற்றதும் பேய் வென்றதும் பேய்?

13 மில்லியன் முஸ்லிம்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் மியன்மாரில் இடம்பெற்ற தேர்தலில் ஆங்சாங் சூயி தலைமையிலான எதிர்க் கட்சி வெற்றியீட்டி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறும் என ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளைக் கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அமைதிக்காக நோபல் விருது வென்ற ஆங்சாங் சூயின் முஸ்லிம் சிறுபான்மை மீதான அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்காததுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் இதுவரை வாய்திறந்தது இல்லை. இவருக்கு நோபல் விருது…

Read More

இரவை பகலாக்கிய எரிநட்சத்திரம் (வீடியோ)

எரிநட்சத்திரத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மில் பலர் கேள்விப்படிருப்போம். சிலர் அதைப் பார்த்துக்கூட இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக யாரிடமும் காட்டவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் அது காணாமல் போய்விடும். இப்படி மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் எரிநட்சத்திரத்தை தனது காரில் உள்ள முன்பக்க கேமரா (dashcam) மூலம் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் யூ-டியூபில் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ 26 லட்சம் பேரைக்…

Read More