Headlines

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில், இன்று காலை (08) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட…

Read More

“கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” சர்வதேச கூட்டுறவு தின விழாவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற 96 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் சிறப்பு அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர்…

Read More

புதிய தேர்தல் முறையை நிராகரிக்கின்றோம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றில் அறிவிப்பு

எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் அமைந்த புதிய தேர்தல் முறையை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பதாகவும் பழைய தேர்தல் முறையின் படி மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் அறிவித்தார். தேர்தல்களைப் பிற்போட்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்காது மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய நல்லாட்சித்தலைவர்கள் வழி வகுக்க வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாகாணசபை எல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பான இன்றைய (07) விவாதத்தில் கலந்து கொண்டு…

Read More

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு……

ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதத்தின் போது நேற்று (05.07.2018) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமூலத்திலே உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். தேசியக் கணக்காய்வு சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்குமா? இல்லையா?…

Read More

அவநம்பிக்கையினூடாக வெளிப்பட்ட கோபமாகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய உரையைப் புரிந்துகொள்ள முடிகிறது. # வெறுப்பு !!!

நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், மேற்படி ஆட்சித் தலைவர்கள் இருவரிடத்திலும், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வரக்காபொல பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர்…

Read More

இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்!    – ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர்..

‘இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கையினை (Investment Protection Agreement) நிறைவு செய்ய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.  எமது நாடு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை கொண்ட ஒரு திறந்த நாடு. நாம் சகலரையும்; ஏற்றுக்கொள்கின்றோம். எமது இருதரப்பு வர்த்தக நிலைகள் தற்போது வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில் இருப்பதையிட்டு நான்மகிழ்ச்சியடைகின்றேன்’ என இலங்கைக்கான ஐக்கிய அரபு  எமிரேட்ஸின் தூதுவர்; அஹமட் அலி அல் முல்லா தெரிவித்தார். நேற்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  விசேட …

Read More

பெரியமடு மக்களின் நீண்டகால நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கு அமைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்பின் பேரில் OHRD தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு பாடசாலைக்கு நீர்த்தாங்கி சகிதம் அனைத்துவகையான நீர் வழங்கல் ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களின் தலைமையில் இக்குடி நீர் திட்டம் மிகவும் விமர்சையாக இன்று (05/07/2018) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்…

Read More

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு ..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைந்து கொண்டார்.. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் சதொச பிரதித்தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) , கட்சியின் அரசியல் விவகாரப்பொறுப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளர்…

Read More

மன்னார் உதயபுர கிராமத்தின் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..

மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் பேசாலை காட்டாஸ்பத்திரி உதயபுர கிராமத்தின் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன . இந்த புனரமைப்பு வேலைத்திட்டத்தில் மன்னார் பிரதேசபை உறுப்பினர் ராசிக் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச இணைப்பாளர் ரஹீம் மற்றும் மன்னார் பேசலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்…

Read More

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று (04) சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் வொக்ஷ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார் 12 வருடங்களின் பின்னர் 45 பேருக்கு இவ்வாறு பதவியுயர்வுக் கடிதங்களை அமைச்சர் றிஷாட்…

Read More

லங்கா சதொச இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளது

‘லங்கா சதொச நிறுவனம்  இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில்  31 பில்லியன் ரூபாவினை கடந்த வருடம் மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2016 உடன் ஒப்பிடுகையில் இதுவரை 15 சத வீத வளர்ச்சியுடன் இந்த  வலைப்பின்னல் மிக உயர்ந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் கொழும்பு 2 இல் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் லங்கா சதொச நிறுவனத்திற்கு www.lankasathosa.org என்ற…

Read More

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதிகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டட்த்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அமீர் அலி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகம் மற்றும் ஓட்டமாவடி செயலகப் பிரிவில் இரண்டு சமூர்த்தி கிராமங்களை தெரிவு செய்து மக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதிகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலான கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்…

Read More