Main News
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; அமைச்சர் றிஷாட் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது மேன்முறையீட்டு நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இன்று (20) தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt எனும் இலக்கத்திலான இந்த வழக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பத்மன்சூரசேன நீதிபதி அர்ஜூன ஒபபேயசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த…
சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!
வியாபார வர்த்தக தகவல் இணைய முனையும் (SLTIP) நேற்று (20.07.2018) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையின் வியாபார தகவல்களை உலகின் பல பாகங்களிலிருந்தும் திரட்டி வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு இலங்கை வர்த்தக திணைக்களம் இந்த இணைய முனையத்தை (SLTIP) ஆரம்பித்துள்ளது. நாடுகளுக்கிடையிலான பொருட்களின் விலைகள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், சுங்கத்தீர்வைகள், வியாபார சட்ட, திட்டங்கள் சந்தையில் நுழைவதற்கான அனுமதியைப் பெறும் தகவல்கள் என்பவற்றை இந்த இணைய முனையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு இணையத்தின் மூலம்…
மட்டக்களப்பில் 3400 மலசல கூடங்களை அமைப்பதற்கு இந்திய அரசு உதவி பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஒப்பந்தம் கைசாத்து!!!
இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் இந்திய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு இந்திய அரசாங்கத்தினால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில்…
அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில் இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது!
மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை தொடர்பில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில் இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது. இலங்கைக்கு சாதகமான இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக தமது கடமைகளை நேர்த்தியாக செய்த இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திண்ம வீதி டயர் (OTR) ஏற்றுமதிக்கான மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வைக்கான …
வடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி. சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு.
நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட வடக்கு செயலணியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை, எவ்வாறாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட மாற்றுக்கட்சி அரசியல் வாதிகள் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் இந்த விடயத்தில் தாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்…
எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!!!
இலங்கையும், எகிப்தும் நீண்டகால நட்பு நாடுகளாகவும், நெருக்கமான உறவை கொண்டவையாகவும், வலுவான பொருளாதார உறவை வளர்ப்பவையாகவும் இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று மாலை (16.07.2018) எகிப்திய தேசிய தினவிழா நடைபெற்றபோது அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, முன்னாள் அரச தலைவர்களான ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மற்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் நெருக்கமான நட்பையும், இறுக்கமான இணைப்பையும் கொண்டு செயற்பட்டதோடு அணிசேரா…
’”பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” -வவுனியாவில் அமைச்சர் றிஷாட்.
தமிழ்ச் சகோதரர்கள் மத்தியிலும் சிங்களச் சகோதரர்கள் மத்தியிலும் நமது மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும் அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் பரப்பப் பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப செய்யும் அரிய முயற்சி என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடாத்திய மூன்று நாள் கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மாலை (15/07/2018) நடைபெற்ற போது பிரதம அதிதியாக அவர் கலந்து கொண்டார்…
அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்….
“யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள அங்குரார்ப்பண விழா பற்றிய உயர்மட்டக்கூட்டம் இன்று (16) காலை யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும்…
நல்லாட்சி அரசின் 1000 குளங்கள் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாழைச்சேனை கள்ளிச்சை குளம் புனரமைப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி!!!
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சின் வழிகாட்டலில் நாட்டில் ஆயிரம் குளங்கள் புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குளங்கள் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவின் கீழ் உள்ள கள்ளிச்சை குளத்தினை புணரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும்…
இலங்கையின் சுதேச மருத்துவத்திற்கு சர்வதேச சட்டப்பாதுகாப்பு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!!!
இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து, புலமைசார் சொத்துக்களின் உதவியுடன் எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவ முறையை அறிமுகம் செய்வதற்காக கடந்த 5வருடங்களாக வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு இன்று காலை (13) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் ஆயுர்வேத எக்ஸ்போ – – 2018 கண்காட்சியில்…
அம்பாறை மக்களுக்கு அரசியல் அதிகாரம்!!!
அம்பாறை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு மாவட்டம் அந்த மாவட்டமே இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பாக இருக்கின்றது அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையை நிர்ணயம் செய்கின்ற ஒரு மக்கள் சக்தியாகவும் இருக்கின்றது பல வலுவான சக்திகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில் கடந்த 08/07/2018 ம் திகதி இலங்கை மக்களும் இலங்கை அரசியல்வாதிகளும் ஆச்சரியம் அடைந்த நிகழ்வாக அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் இருந்தது அப்படி என்ன ஆச்சரியம் ? இது வரை…
தேர்தலில் தோற்கும் குதிரைக்கு பந்தயம் கட்வோரே அதிகம். பிரதியமைச்சர் அமீர் அலி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் பல இடங்களில் இருக்கின்றார்கள் என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாலையடிவெட்டை – நெல்லிக்காடு பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நெல்லிக்காடு தையல் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு…
