Main News
முஸ்லிம்கள் அடிப்பட்ட போது அமைதியாக இருந்த மஹிந்தவுக்கு திடீர் ஞானம்: முஜிபூர்
முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த தருணத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் தலைமைகளை சந்திக்க தீடீரென ஞானம் பிறந்தமைக்கான காரணம் என்ன? என்று மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயமிழைக்கப்பட்டபோது சட்டத்தை அமுல்படுத்தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனாதிபதி இன்று முஸ்லிம்களுடன் சந்திப்புகளை ஏற்பாடுசெய்வது நகைப்புகுரியதாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய…
3268 கிலோ மீட்டர் துரத்தை ஓடியே கடந்து ஹஜ் செய்யவரும் துருக்கியை சாந்த அகீன் !
நீங்கள் படத்தில்பார்க்கும் சகோதரனின் பெயர் அகீன் துருக்கியை சார்ந்தவர் இந்த ஆண்டு ஹஜ் செய்வதர்கு முடிவு செய்துள்ளார் அவர் வாழும் துருக்கியின் அன்கரா நகரில் இருந்து 3268 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மக்கமாநகரம் இந்த தொலை துரத்தை அவர் ஓடியே கடக்க முடிவு செய்திருக்கிறார். அதர்கான முயர்ச்சிகளிலும் பயிர்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து ஈடு பட்டுவருகிறார் எதிர் வரும் நோன்பு பெருநாள் தினத்தில் இருந்து தனது ஹஜ் பயண ஓட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார் தினமும் 50 கிலோமீட்டர் துரம்…
அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவு
அகமட் எஸ். முகைடீன் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தபகத் தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (05.06.2015) மாலை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கட்சியில் இணைந்து கொண்ட சிராஸ் மீராசாஹிப்பிற்கு கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவி அமைச்சர் றிஷாத் பதியுதீனால் வழங்கிவைக்கப்பட்டது….
ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள சந்திப்பின் போதுää தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களை காட்டிக் கொடுக்க மாட்டேன். முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதுதொடாபில் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.(SM)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன் ஜனாதிபதி மைத்ரி
நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து மிகப்பெரிய அரசியல் முடிச்சை அவிழ்த்துள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகவாதிகள் இனியும் வாய்மூடி இருக்காது சமூகத்தின் நலனுக்காக குரல் எழுப்பவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த சன்னஸ்கலவின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், நான் இன்று ஜனாதிபதியாக இருந்தாலும்…
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட விபரீதங்களுக்கு முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்பமுமே காரணம்
அளுத்கம சம்பவத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட விபரீதங்களுக்கு முன்னாள் ஆட்சியாளரும் அவரது குடும்பத்தினரும் நெருங்கிய காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர் என்பதை அதில் சம்பந்தப்பட்டவர்களே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் தெரிவித்தார். கொழும்பு – 12, வாழைத்தோட்டத்தில் அமைந்துள்ள சுவர்க்கத்து மலர்கள் பாலர் பாடசாலையின் 30 ஆவது வருடப் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து…
E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்
ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு 06-05-2015 முதல் அமுலானது. தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி தொழில் செயலகத்தில் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தார். இதற்காக புதிதாக கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தமது நிலுவையை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளலாம். வேலை கொள்வோரால் சம்பளத்தில் கழிக்கப்படும் தொகையைக் கூட உறுப்பினர்கள் அறிந்து கொள்ள முடியும். இலக்ட்ரோனிக் முறையில் பதிவாகி உள்ள சகல உறுப்பினர்களுக்கும் இந்த வசதியை தற்போது பெற்றுக்கொள்ளலாம்….
ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் விபரம்
ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்ததாக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார். இவ்வாறான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்களான ராஜித…
மைத்ரியை சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்ய வேண்டும்.
அஸ்ரப் ஏ சமத் மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும் என இன்று நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் மத்திய மாகாண சபை உறுப்பிணா அசாத் சாலி தெரிவித்தார். அவர் மீள தமது சகோதராகளையும், சக ஆட்களையும் பாதுகாக்க மீள அரசியலில் புக நாம் இடமளியோம். இந்த நாட்டில் உள்ள சிறுகட்சிகள் ஜ.தே.கட்சி மற்றும் சிறுபாண்மைச் சமுகங்கள்…
சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்துவைப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் இன்று திறந்து வைத்தார். பிரசித்தி பெற்ற மடு மாத ஆலயத்திற்கு வருகைத்தரும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களினது நலன் கருதியும்,பிரதேச மக்களின் நன்மை கருதியும் அமைச்சர் இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் சதொச நிறுவனமும் ஒன்றாகும.100 நாள்…
மதுரன்குலி – கனமூலை பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை
ஆசிரியர் பீடம் காசு – பணம், தங்கம் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போனதை கேள்வி பட்டு இருப்போம். அனால் நேற்று முன்தினம் மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் 2 ஏக்கர் காணி காணாமல் போயுள்ளது. மதுரன்குலி – கனமூலை பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை எனவும் கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படுமெனவும் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை புதிய கனமூலை இளைஞர் படையணி எனும் அமைப்பு விநியோகித்துள்ளது.
அமைச்சர் றிஷாத் தலைமையில் பாணந்துறை கெசல்வத்தை பள்ளிவாசல் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)
பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன்,தொழிலதிபர் அல்-ஹாஜ்.ஜே.புஆத் மற்றும் பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.ஆரிப் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைப்பதை பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் சாஹிர் அன்சாரி,பள்ளி அபிவிருத்தி குழு உறுப்பினர்களான பைசல்,பயாஜ் ஆகியோரையும் படங்களில் காணலாம்.
