Headlines

ஏறாவூரில் றிஷாத் பதியுதினை ஆதரித்து மக்கள் பேரணி

றியாஸ் ஆதம் வடபுல அகதி மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இனவாத அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களையும் கன்டித்தும் வடபுல மக்களின் விடுதலைக்காக போராடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதினை ஆதரித்தும் மாபெரும் மக்கள் பேரணி ஏறாவூர் பிரதேசத்தில் (15.05.2015) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அன்றைய தினம் ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து ஆரம்பமான மக்கள் பேரணி ஏறாவூர் முதலாம் குறிச்சி ஜூம்ஆ பள்ளிவாசலிருந்து ஏறாவூர் நகர சபை வரை சென்றது….

Read More

பலஸ்தீனத்திற்கு பணம் சேர்த்தவர்கள் மரிச்சிக்கட்டிக்கு மெளன‌ம் காப்பது ஏனோ…..?

– எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில். பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும். அதுபோல், மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி. நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த…

Read More

இனவாதிகளாலும், இனவாத ஊடகங்களாலும் வில்பத்து சரணலாயம் !

 -யு.ஊ.யு. மிஸ்காத் – என காட்டப்படும் சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும்;இ மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு இன்றும் (14ஃ05ஃ2015) 04 பேரூந்துகளில் பிக்குமார்கள், ஊடகவியலாளர் போன்றோர் சென்றுள்ளனர்;. இது தொடர்பாக கருத்துக் கூறிய, கரடிக்குழியை சேர்ந்த முசலிப் பிரதேச சபை உறுப்பினர் எம். சுபியான் : இன்று எமது பிரதேச சபை கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ்வேளை பகல் 04 பஸ்களில் பிக்குமார் செல்வதாக எமக்கு மக்களால் தகவல் கிடைத்ததும், தவிசாளர் உட்பட 09 உறுப்பினர்களும் மறிச்சிக்கட்டிக்கு சென்றோம். அங்கு…

Read More

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றன -சித்தீக் நதீர்

ஏ.எச்.எம்.பூமுதீன் மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றனர் என அ இ ம காங்கிரஸின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சித்தீக் நதீர் அவர்கள் ஊடகச்செய்திகளுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது 30 வருட யுத்தத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் தமிழர்கள்க்குமிடையில் உறவுப்பாலமாக செயற்பட்டு நாட்டின் நலனையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் உணர்ந்து செயற்பட்டார்கள். அவ்வாறிருந்தும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பட்ட துன்பங்களுக்கு ஒப்பான இழப்புக்களையும் துன்பங்களையும் இன்றுவரை அனுபவித்து வருகின்றார்கள். ஒரு சில மணிநேரங்களுக்குள்…

Read More

திருமறை குர்ஆனை நேசிக்கும் அமெரிக்காவின் திரைபட நட்சத்திம் லென்ஸி லோஹான்!

இதோ நாம் வெளியிட்டுள்ள படம் அரபி சமூக வலைதளங்களில் அமோக வரவேர்ப்பை பெற்ற ஒரு படமாகும் அவரது பெயர் லென்ஸி லோஹான் அமெரிக்க திரை பட நட்சத்திரம் அவர் கையில் வைத்திருப்பது திருமறை குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருமறை அல்குர்ஆன் போதையில்லாத ஒரு வாழ்வை முஸ்லிம்களுக்கு அமைத்து தந்திருக்கிறது அது போன்ற ஒரு வாழ்வு எனக்கும் கிடைத்திட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார் அவர் இஸ்லாத்தை நோக்கி…

Read More

மஹிந்த முன்கூட்டியே தேர்தல் நடத்த காரணம்?

கடந்த காலங்களில் கட்டுமான அபிவிருத்தியில் பெற்றுக்கொண்ட பயிற்சியானது அபிவிருத்தி என்பது கட்டுமானம் மட்டுமல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிக்கொத்தவில் கொழும்பு மாவட்ட இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களில் அபிவிருத்தி இல்லாமையின் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றது என குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி என்பது கட்டுமானம் என துரதிஷ்டவசமாக கடந்த 5, 6 வருடங்களில் இந்த நாட்டில்…

Read More

மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் 1923 இலிருந்து அங்கு வாழ்ந்துள்ளனர், அதற்கான உறுதிகளும் உண்டு

– யு.ஊ.யு. மிஸ்காத் – சில குழுக்களாலும், சில ஊடகங்களாலும் வில்பத்து சரணலாயம் என காட்டப்படும் சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும் மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு நேற்றும் (14/05/2015) 04 பேரூந்துகளில் பிக்குமார்கள், ஊடகவியலாளர் போன்றோர் சென்றுள்ளனர். இது தொடர்பாக கருத்துக் கூறிய, கரடிக்குழியை சேர்ந்த முசலிப் பிரதேச சபை உறுப்பினர் எம். சுபியான், நேற்று எமது பிரதேச சபை கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ்வேளை பகல் 04 பஸ்களில் பிக்குமார் செல்வதாக எமக்கு மக்களால் தகவல் கிடைத்ததும், தவிசாளர்…

Read More

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கிங்கினார் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் இன்று (15) காலை அனுமதி வழங்கியுள்ளார். சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று (15) காலை 9.10 அளவில் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி அளித்து கையொப்பமிட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அடங்கலாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் அமுலுக்கு…

Read More

கோட்டாவை செப்டம்பர் மாதம்வரைகைது செய்ய முடியாது – பிரதமரின் உரை (விபரம்)

அஸ்ரப் ஏ சமத் கோட்டாபயா ராஜபக்ச செப்டம்பர் மாதம்வரை நிதி மோசடியில் அவரை கைது செய்ய முடியாது. என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி அமைச்சரவைக்கு நான் விளக்க வேண்டும் அத் தீர்ப்பு பற்றி எனக்கு கூறுங்கள் என சட்டமா அதிபரை நான் வினவியபோது. இவ்விடயம் பற்றி சட்டமா அதிபருக்கோ சட்ட திணைக்களத்திற்கு எதுவும் தெரியாது இதனை நாங்கள் அறிந்திருக்க வில்லை என கூறுகின்றார். அடுத்த பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய அமைச்சரவை வரும் இந்த செப்படம்பர் மாதம்…

Read More

சிங்களவர்கள் மரம் வெட்டினால்? – முஸ்லிம்கள் மரம் வெட்டினால்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தம்புள்ளையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் காடு வெட்டி சிங்களவர்கள் குடியேற முயற்சிக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டால் அதனை சட்டவிரோத மரம் கடத்தல் என்று கூறி உண்மையை மறைக்கிறார்கள். ஆனால்,வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியுடன் தொடர்புபடாத இடங்களில் முஸ்லிம்களை சட்டரீதியாக குடியேற்ற முயன்றால் அதற்கு மரக்கலயாக்களின் சட்டவிரோத குடியேற்றம் என்று கூறி பொய்யை வளர்க்கிறார்கள். என்ன அநியாயம் ஐயா இது? இனவாத சிங்களவர்களால் முஸ்லிம்களை ஏளனப்படுத்த பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று மரக்கலயா)

Read More

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் பூர்த்தி

பதவிக் காலம் பூர்த்தியான உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளது. 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் இன்றுடன் பூர்த்தியாகும் நிலையில், அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மாநகரசபைகள் ஆணையாளர்களினாலும், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் செயலாளர்களினாலும் நிர்வாகம் செய்யப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் அதிகாரிகளினால் நிறுவனங்கள் நிர்வாகம் செய்யப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்றங்ளை நிர்வாகம் செய்த மேயர்கள், நகர பிதாக்கள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்…

Read More

வில்பத்து விவகாரம் அரசியல் பழிவாங்கும் செயலேயன்றி வேறு ஒன்றும் இல்லை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரித்தான காணிகளிலே அவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகும் பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…. 2002 ஆம் வருடம் நான் பெருந்தோட்ட அமைச்சராக இருந்த போது வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த   முஸ்லீம்களை புத்தளத்தில் குடியேற்ற சுமார் 15 ஏக்கர் காணியை பெற்றுக்கொடுத்தேன் அப்போது அமைச்சர் ரிசாத் ஊடக அகதிகளான முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டனர். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தை நேரடியாக…

Read More