Headlines

அமைச்சர் றிஷாதின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் நீதியமைச்சர்

– அஸ்ரப் ஏ சமத் – 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய வாக்காளர்களை மீண்டும் தேர்தல் இடாப்பில் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைகொண்டுவரதுரிதநடவடிக்கைமேற்கொள்ளப்படுகின்றது. அ.இ.ம.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனீன் வேண்டுகோழுக் கிணங்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதற்கான நடவடிக்கையை மேற்கெண்டுள்ளார். கடந்த  சில தினங்களுக்குமுன்னர் நீதியமைசசர் ராஜபக்சவை அமைச்சர் றிசாத்பதியுத்தீன் சந்தித்து இந்தவிடயத்தை சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பானஅவசரநடவடிக்கைஎடுக்குமாறு கோறியிருந்தார். அமைச்சர் றிசாத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் ராஜபக்ச…

Read More

இலங்கை தொடர்பில் ஐ.நா சபையில் விசேட அறிக்கை

இலங்கையின் கடந்த வருட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உரிமை தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா கிரேபியோ இந்த கருத்தை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் 29வது கூட்டம் ஜூன் 13ம் திகதி தொடக்கம் ஜூலை 3ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதன்போது பிரான்சுவா கிரேபியோ இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்பித்து உரையாற்றவுள்ளார். அவரது…

Read More

குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக, கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாக குமார் சங்கக்கார தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் சங்ககார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்திருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின்…

Read More

3 இலட்சத்து 16 ஆயிரம் ஆசிரியர்களில் முஸ்லிம் ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரே – கபீர் காசீம்

அஸ்ரப் ஏ சமத் முஸ்லீம் மாணவர்கள் நூற்றுக்கு 51வீதமாண மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரத்தில் தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுணாகளாகவும்;, பாதையோர வியாபாரிகளாகவும், அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளராகச் செல்கின்ற நிலைமையை நாம் அவதாணிக்க முடிகின்றது. இந்த நாட்டில் 3 இலட்சத்து 16ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 13ஆயிரம் முஸ்லீம் ஆசிரியர்கள் உள்ளனர். 1ஆசிரியருக்கு 24 மாணவர்கள் என்றரீதியில் உள்ளனர். முஸ்லீம்களது பல்கலைக்கல்வியில் 6வீதம் மாணவர்களே உயர்தரம் சித்தியடைகின்றனர். 300 முஸ்லீம் பாடசாலைகள்…

Read More

வில்பத்து காட்டுக்குள் முஸ்லிம்கள் குடிபெயரவில்லை. அமைச்சர் றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் வில்பத்து காட்டுக்குள் முஸ்லீம் குடிபெயரவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு. எதிர்வரும் புதன்கிழமை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சில ஊடகங்கள், பௌத்த அமைப்புக்கள் வில்பத்து காட்டில் முஸ்லீம்கள் குடியேறியுள்ளனர். எனத் தெரிவிப்பதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை வழக்கொன்ரை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து 85க்கும் மேற்பட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களின் ஊடகாவியலாளர்கள் குழுவொன்று மன்னாh,; மறிச்சுக்கட்டி, முசலி வில்பத்து பிரதேசங்களுக்கு நேற்றுக் காலை சென்றனர். அங்கு அமைச்சர் றிசாத்…

Read More

கடலில் தத்தளிக்கும் ரோஹின்யா முஸ்லிம்களை மீண்டும் கடலில் தள்ளாதீர்கள் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உருக்கமான வேண்டுகோள்

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் கேட்டுள்ளார். இந்நாடுகளின் கொள்கைகள் பயங்கரமானதாக உள்ளது. படகுப் பயணம் மேற்கொண்ட குடியேறிகள் ஆறாயிரம் பேர் வரை, கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இவர்களது உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சட்டவிரோதக் குடியேறிகள் எண்ணூறு பேர் வரை, இந்தோனேசியா…

Read More

இனவாதிகள் சொல்வது உண்மையாக இருந்தால் எமது சொந்த ஊரை கண்டுபிடித்து தரவும்…! மரிச்சிகட்டி மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்…..

வில்பத்து வனத்துக்கு உற்பட்ட பிரதேசத்துக்குள் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் மீள் குடியேற்றம் செய்துள்ளதாக சில கடும்போக்கு அமைப்புகளும் சில சிங்கள ஊடகங்களும் கதை பரப்பி வரும் நிலையில் மடவளை நியூஸ் செய்தி குழு மன்னார் மரிச்சிக்கட்டி பிரதேசத்துக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டோம். அதன் போது நேற்றைய தினம்  மரிச்சிக்கட்டி ஜாசிம் மாகா வித்தியாலத்தில் அவ்ஊர்மக்களுக்கான விஷேட கூட்டம் ஒன்று ஜும்மாவின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன் போது இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்கள்…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார

திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு இரண்டு மாதங்கள் கடந்தும் சபாநாயகர் பதிலளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் குறித்து திடமான ஓர் தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரப்படவுள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை அரசியல் சாசன…

Read More

இந்த அல்லாஹ்வின் மாளிகைக்கு, கூரைப் போட உதவுங்கள்

புத்தளம் நகரின் வடக்கு பகுதியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளிவாசலின் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ள பகுதியைக் காண்கிறீர்கள். இங்கு கொன்க்ரீட் தூண்கள் அமைத்து, அரை வாசி சுவர் எழுப்பியுள்ள பகுதியை காணலாம். இந்த மஹல்லாவில் வாழும் மக்களோ வறியவர்கள். இதை வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் ஒருவர் சென்ற நோன்புக்கு முன்பாக செய்வதற்கு உதவினார். அதைத் தொடர்ந்து எப்படியாவது கூரையை சென்ற நோன்புக்கு முன்பதாக போட்டுக் கொள்ள பல முயற்சிகளை செய்தோம், முடியவில்லை. அடுத்த நோன்பும் அண்மித்து…

Read More

100 வீதம் முஸ்லிம்கள் செரிந்துவாழ்ந்த, வரலாற்று பூமி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்..?

‍- இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில். பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும். அதுபோல், மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி. நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த பூமி…

Read More

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச – அமைச்சர் றிஷாத் பதியுதீன்சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் சம்மாந்துறை சென்றல் கேம்; பகுதிக்கு ஒரு (குவாசி) காதீ நீதிமன்றம், வடபுல இடம்பெயர்ந்த வார்க்காளர்களை பதிவதற்கு சட்ட சீர்திருத்தம் கொண்டுவருவது பற்றி நீதிஅமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். நாவிதன் வெளி மத்தியமுகாம் சம்மாந்துறை தொகுதியில் அமைந்திருந்தாலும் சம்மாந்துறையிலிருந்து சுமார். 15 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. இம் மக்களுக்குத் தேவையான காதி நீதிமன்றம் இல்லாமை நீண்டகால குறைபாடாகவே இருந்து வந்தது. குடும்ப பிணக்குகள் தொடர்பான விடயங்களுக்கு சம்மாந்துறையில் உள்ள காதியார் நீதிமன்றத்திற்கு இம் மக்கள் செல்ல…

Read More

வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க அல் –ஜாசிம் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான சம்மேளனம் உருவாக்கம்

மன்னார்  மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மரிச்சிகட்டி,பாலைகுழி மற்றும் கரடிக்குழி மக்கள் கடந்த முன்று வாரகாலமாக பல்வேறு இனவாத குழுக்களினால்  சிறமங்களை எதிர் நோக்கி வருகின்றார். குறிப்பாக இந்த நாட்டில் மிகவும் விமர்சத்திற்கு உள்ளான வில்பத்து மீள்குடியேற்ற பிரச்சினைகள் என்ற விடயத்தினை கையாளும் நோக்குடன் மேல் குறிப்பிட்ட முன்று கிராமங்களையும் ஒன்றாக சேர்த்து விசேட கலந்துரையாடல் ஜீம்மா தொழுகையின் பின்பு  மரிச்சிகட்டி சமுக சேவையாளர் மஹ்முத் தௌபீக் மௌலவின் தலைமையில் ஜாசிம் பாடசாலையில் மக்கள்…

Read More