Main News
இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!
2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சிறுவர் தொழிலாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். சிறுவர்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட வேண்டியது அவர்களின் உரிமையாகும். எனினும் பல சிறுவர்கள் இன்று தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று நட்டாஸா தெரிவித்துள்ளார். இலங்கையின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், 18வயது வரை அவர்கள் பாடசாலை கல்வியை பெறவேண்டும் இதற்கு கீழ் உள்ள…
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்!
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர். பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின்…
கொழும்பு -09 ல் புதிய ஜூம்ஆப் பள்ளிவாசல் திறப்பு
அஸ்ரப் ஏ சமத் கொழும்பு -09 ஆரமாய பிளேசில் உள்ள தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தில் அருகில் புதிய ஜூம்ஆப் பள்ளிவாசல் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு அமைச்சா்கள் ரவுப் ஹக்கீம், ஏ.எச்.எம் பௌசி, மேல் மாகாண சபை உறுப்பிணா்கள், அர்சத், பைருஸ் ஹாஜி மற்றும் இப்பிரதேச ஹிந்து, பௌத்த, கிரிஸ்த்துவ மத குருமாா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் சர்வதேச இஸ்லாமிய நிலையம், நவ்பா் மௌலவி, ஜம்மியத்துல் உலமா முபாரக் மௌலவி ஆகியோறும் உரையாற்றினாா்கள்.
விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு அறிவுறுத்தல்
வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நாட்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இவ்வருடத்துக்குரிய விண்ணப்பப் படிவங்கள் யாவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விசேட கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அனுமானித்துள்ளதாக…
8 கர்ப்பிணிகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு
நாட்டில் காணப்படும் H1 N1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 8 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக தென்மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கராப்பிட்டிய மற்றும் பலப்பிட்டிய பகுதியிலேயே இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் டொக்டர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். ஹம்பாந் தோட்டை, காலி, தர்காடவுன், கேகாலை, மட்டக்களப்பு மற்றும் களுபோவில ஆகிய…
சூரியன் மறையாத பகுதிக்கு, புதிய ‘நோன்பு விதி’ அறிமுகம்
இருபத்தி நான்கு மணிநேரமும் சூரிய ஒளி இருக்கும் ஆர்டிக் வட்ட பிராந்தியத்தில் பகல் வேளையில் ரமழான் நோன்பை கடைப்பிடிக்க அங் குள்ள முஸ்லிம்களுக்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஜுன் 18ஆம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பமாகும் நிலையில் சூரியன் மறையும்வரை உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று சுவீடன் முஸ்லிம் அமைப்பொன்று புதிய வழிகாட்டியை வழங்கியுள்ளது. எனினும் ரமழான் ஆரம்பித்து மூன்று நாட்களில் அங்கு ஆண்டின் மிக நீண்டநாள் பதிவாக வுள்ளது. “ஆர்டிக் வட்டத்தின் வடபகுதியில் இருப்பவர்கள்…
சுனாமி, மறிச்சுக் கட்டி மற்றும் வடக்கில் இருப்பிடம் இழந்த மக்களுக்கான அவசரக் கூட்டம்
சுனாமியில் வீடிழந்த மக்கள், மறிச்சுக் கட்டியில் நிலம் இழந்த மக்கள் ,வடக்கில் இருப்பிடம் இழந்த மக்களுக்காக அவர்களது துயர் துடைக்க இவ்வாறு இவர்கள் ஒரு அவசரக் கூட்டம் கூட்டப் பட்டிருக்குமானால் அவர்களது துயரங்கள் எப்போதோ துடைக்கப் பட்டிருக்கும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறது . நமது கட்சி அரசியலில் களம் இறங்கியது மக்கள் துயர் துடைக்கவே அன்றி வேறில்லை ஆனால் இப்போது நடை பெறுவது இதுதான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 20ஆவது…
மரண தண்டனை குறித்து, ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் – ஜோன் அமரதுங்க
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி ஒரு சில தினங்களில் அறிவிப்பார். மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு 90 வீதமானவர்கள் ஆம் என்றே கூறியிருக்கின்றார்கள். எனவே மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி விரைவில் அறிவிக்க உள்ளார். போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக…
போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன் : மஹிந்த ராஜபக்ச
தேர்தலில் போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசிய பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக அங்கு சென்றிருந்தபோது அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். அவரின் கீழ் போட்டியிடுவதற்கு இடமில்லையென அவர் கூறியுள்ளாரே. எப்படியும் தேசிய பட்டியலில் இடம் தருவதாக கூறினாலும் வெற்றி பெற்ற பின்னர் பெயரை வெட்டி விடுவார்கள்….
வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்க கல்வியமைச்சருக்கு கோரிக்கை
அஸ்ரப் ஏ சமத் வரும் வெள்ளியன்று ரமலான் தலை நோன்பு வரலாம் என்ற நிலையில் அதே தினத்தில் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது அன்றைய தினம் முஸ்லிம் மாணவர்கள் நேன்பு நோற்ற வண்ணம் பாடசாலை செல்லவேண்டியது ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.. இந்த அசௌகரியத்தை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளரும் தென்னை பயிர்செய்கை தலைவருமான ஹிதாயத் சத்தார் கல்வி…
பிரதமர் வேட்பாளர் நானல்ல – சமல் ராஜபக்ச
தன்னை பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. அரசியலில் இருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ச நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன. பிரதமராக நான் நியமிக்கப்படவுள்ளதாகவோ, பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவோ வெளியாகும் செய்திகளில்…
தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது -கபீர் ஹசீம்
அமைச்சரவையில் இறுதி அனுமதி கிடைக்க பெற்ற 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகரிக்க கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விகிதாசார முறையில் கீழ் தயாரிக்கப்படும்…
