Main News
அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம்; 5 ஊழியர்கள் காயம்
பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார். சம்பவத்தின் போது குறித்த விமானத்தில்…
மகளிா் அமைப்பினால் 200 குடும்பங்களுக்கு உதவி
– அஸ்ரப் ஏ சமத் – அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிா் அமைப்பினால் நோன்பு கால உலா் உணா்வு பொதிகள் 200 குடும்பங்களுக்கு தெமட்டக்கொடையில் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் 5ஆயிரம் பெருமதி வாய்ந்த பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கலாநிதி ஹாரீஸ் டீன் முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் வை.எம்.ஏ.யின் மகளிா் அமைப்பின் தலைவி மக்கியா ஆகியோறும் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு ரமலான் நோன்புப் பொதிகள் பகிா்ந்தளித்தனா். அத்துடன் பாத்திமா ஆனாதை இல்லத்துக்கு , கலாநிதி ஹாரீஷ்…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி பாதை
இலங்கை – இந்தியாவை தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார். இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன்…
சவூதி அரேபியாவிற்கு விஜயம், மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு
இலங்கையில் 7 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், நாடு திரும்பும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த தூதுவர் மேற்கொண்ட பணிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் செயற்படுத்தி வரும் வேலைத்திட்டங்களுக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் உதவும் என அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் கூறியுள்ளார். அத்துடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் அவர்…
ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் பெற்றிருக்கவில்லை – அமைச்சர் றிஷாத்
– அபூ அஸ்ஜத் – நான் வில்பத்து காட்டுக்குள் 600 ஏக்கர் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டு அரைவேக்காட்டுத்தன அரசியல் செய்பவர்கள் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் ஒரு கூறுகின்றேன்,ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் மன்னாரிலோ,வவுனியாவிலோ,முல்லைத்தீவிலோ பெற்றிருக்கவில்லை ,என பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார். முசலி பிரதேச கல்வி மேம்பாட்டுக்கும்,வளர்ச்சிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பங்களிப்பு அத்தோடு…
இந்த பதவிகள் சமுகத்தை பாதுகாக்கவே – றிஷாத் பதியுதீன்
முஹம்மத் சனாஸ் இன்று என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று செயற்படும் நபர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான் அணிந்திருக்கும் இந்த பதவிகள் என்கின்ற அணிகலன் மக்களை பாதுகாக்கவே,எமது இந்த மக்களின் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் எனில் இதனை கழட்டிவிட நான் தயாராக இருக்கின்றேன்.அதே போல் இந்த மக்களுக்கு கவசமாக செயற்படக் கூடியவர்கள் தலைமை தாங்க தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான…
‘கொள்ளையர்களுடன் போராட்டம் நடைபெறுகிறது’ – சஜித்
நல்லாட்சிக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கு ஆதரவான அரசாங்கத்திற்கும், நிவாரண எதிர் கொள்ளையர்களுக்கும் இடையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மக்களுக்கு சேவையாற்றி வரும் நல்லாட்சி அரசாங்கத்தையா, தேசத் துரோகிகளையா ஆதரிப்பது என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஆட்சி நடத்திய காலத்தில் வறிய மக்களுக்கு இரக்கம் கட்டப்பட்டதா? அவ்வாறு இரக்கம் காட்டியிருந்தால் ஏன் புதிய அரசாங்கம் வறியவர்களுக்கு சேiவாயற்றும் போது அதனை தடுக்க…
‘விதவையான சந்திரிக்கா, மீண்டும் திருமணம் முடிக்கக்கூடாது’ – ஞானசாரர்
-ஏ எம் எம் முஸம்மில்- பொதுபல சேனா அமைப்பின் செயலாளார் ஞானசார தேரர் 16-06-2015 ஊடக சந்திப்பில் கூறியவற்றை தொடர்ந்து கேளுங்கள்.. பண்டாரநாயக்கர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களில்லை. இவர்கள் இந்திய வம்சாவளியை கொண்டவர்கள் (PRONOUNCE AS PANDARA NAYAGAM – NOT BANDARA NAYAKA ). இந்த பண்டார நாயக்கர்கள் சுமார் மூன்று பரம்பரைகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் தமிழர்கள். அதனால்தான், நாங்கள் பிரபாகரனுக்கு ஏதாவது சொன்னால் சந்திரிக்காவுக்கு கோபம் வருகின்றது. ஆகவேதான், நங்கள்…
உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் – துல்கர் நயீம்
உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் ; சட்டத்தரணி துல்கர் நயீம் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்) ஜே.எப்.காமிலா பேகம் கடந்த சனிக்கிழமை பொலன்னறுவை சி.டி.எஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்குமாகான சபை உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய சட்டத்தரணி துல்கர் நயீம் மேற்படி கருத்தை தெரிவித்தார். சுங்காவில் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர்N.A.A.நாசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும்…
தரம் ஒன்றிற்கான அனுமதியில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை!
அடுத்த வருடம் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிக்கும்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன் நெருங்கிப் பழகுவோரின் பிள்ளைகளை சட்டவிரோதமாக பாடசாலைகளில் சேர்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாத பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலைகளில் தரம் ஒன்றில்…
ரமழான் தலைப்பிறை தொடர்பான மாநாடு இன்று
ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விஷேட மாநாடு இன்று 17 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து இலங்கை. முஸ்லிம்களயும் கேட்டுக்கொள்கிறது. தொலைபேசி இலக்கங்கள் – 0112432110 0115234044…
நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்களிப்பும் அளப்பறியது: பிரதி ஊடக அமைச்சர்
நிறைவேற்று அதிகாரம்- அரசியலமைப்பு- சட்டம் நீதி மற்றும் ஊடகம் என்பவற்றினால் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி நடைபோடும் என பிரதி ஊடக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ஒரு அரசாங்கத்தை உருவாக்கத்தின் ஊடகம் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. அது நல்லபடியாக நடக்கவேண்டும். அரசியல்வாதிக்கு ஊடகம் மிகவும் அவசியம். அரசியல்வாதியின் ஒரு…
