Main News
பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு
காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோற்றுப்போகும். தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மஹிந்தவுக்குக் கிடைக்காது. பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை திரட்டிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் தெரிவித்தாவது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை…
இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்
இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை…
புதிய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை – மத்திய வங்கி
திய அரசால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அரசு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி புதிய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநரது நியமனம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நாணயத்தாளின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன், ஐயாயிரம் ரூபா நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும்,அவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் இதனால் இந்த நாணயத் தாள் செல்லுபடியாகாது எனவும் முன்னாள்…
பொது மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டாம் – ஜனாதிபதி
மக்களின் பணத்தை சுவரொட்டிகளுக்காகவும், பதாதைகளுக்குமாக வீணடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த கால மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, சுவரொட்டிகளையும், பதாதைகளையும் அமைப்பதற்காக பல பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. இதற்காக அரச நிறுவனங்களினால் பொது மக்களின் நிதி ஒதுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இதனைத் தவிர்த்து, அந்த நிதி மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பு : ஜனாதிபதி
எமது நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரச நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புகைத்தலுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய வசதி
புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த தொலைபேசி சேவையை நீண்ட நேரம் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்…
தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது….
தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க நேற்று தெரிவித்தார். இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான…
சிறுபான்மைச் சமுகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் -அமீர் அலி
அஸ்ரப் ஏ சமத் 20வது அரசியல் திருத்தம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த நாட்டில் இருக்கின்ற இரண்டு பிராதான அரசியல் கட்சிகளும் சேர்ந்து சிறுபான்மைச் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கிவிடாதீர்கள். ஒரு நல்லாட்சி ஏற்பட வேண்டுமென்று ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமுகமும் ஒருங்கிணைந்து மைத்திரிபால சிறிசேனாவை இந் நாட்டுக்கு ஜனாதிபதியாக்கினார்கள். சிறுபான்மைச் சமூகம் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமையால் இதைக் காரணமாக வைத்துக்கொண்டு…
அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்
இந்திய முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கோலோன் தெரிவித்தார். இதற்கமைய, நாளை வெள்ளியன்று கலாநிதி அப்துல் கலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற வருடாந்த ஊடகவியலாளர் மாநாட் டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்சக்தி மற்றும்…
சு.க.வை பிரபாகரன் காப்பாற்றியிருந்தார்
புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிரதான கட்சிகளுக்கும் சிறு மற்றும் சிறுபான் மைக் கட்சிகளுக்கும் இடையில் வித்தியாசமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சமூகப் பிரதிநிதிகளின தும் மக்களினதும் கருத்துக்களை அறிய வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருப்பதாலேயே 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். அக்கட்சியானது பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க…
இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம் நுகர்வோர் அதிகார சபை நேற்று கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
