Headlines

பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது. பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை திரட்­டிக் ­கொள்ள வேண்டும் என கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது, எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ஸவை…

Read More

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை…

Read More

புதிய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை – மத்திய வங்கி

திய அரசால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அரசு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி புதிய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநரது நியமனம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நாணயத்தாளின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன், ஐயாயிரம் ரூபா நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும்,அவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் இதனால் இந்த நாணயத் தாள் செல்லுபடியாகாது எனவும் முன்னாள்…

Read More

பொது மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டாம் – ஜனாதிபதி

மக்களின் பணத்தை சுவரொட்டிகளுக்காகவும், பதாதைகளுக்குமாக வீணடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த கால மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, சுவரொட்டிகளையும், பதாதைகளையும் அமைப்பதற்காக பல பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. இதற்காக அரச நிறுவனங்களினால் பொது மக்களின் நிதி ஒதுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இதனைத் தவிர்த்து, அந்த நிதி மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

போதைப்பொருள் விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பு : ஜனாதிபதி

எமது நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரச நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

புகைத்தலுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய வசதி

புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த தொலைபேசி சேவையை நீண்ட நேரம் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்…

Read More

தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது….

தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க நேற்று தெரிவித்தார். இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான…

Read More

சிறுபான்மைச் சமுகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் -அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் 20வது அரசியல் திருத்தம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த நாட்டில் இருக்கின்ற இரண்டு பிராதான அரசியல் கட்சிகளும் சேர்ந்து சிறுபான்மைச் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கிவிடாதீர்கள். ஒரு நல்லாட்சி ஏற்பட வேண்டுமென்று ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமுகமும் ஒருங்கிணைந்து மைத்திரிபால சிறிசேனாவை இந் நாட்டுக்கு ஜனாதிபதியாக்கினார்கள். சிறுபான்மைச் சமூகம் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமையால் இதைக் காரணமாக வைத்துக்கொண்டு…

Read More

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் தெரி­வித்தார். இதற்­க­மைய, நாளை வெள்ளியன்று கலா­நிதி அப்துல் கலாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற வரு­டாந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டுகையில், மின்­சக்தி மற்றும்…

Read More

சு.க.வை பிரபாகரன் காப்பாற்றியிருந்தார்

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு மற்றும் சிறு­பான் மைக் கட்­சி­க­ளுக்கும் இடையில் வித்­தி­யா­ச­மான கருத்து வேறுபாடுகள் இருக்­கின்­றன. எனவே பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து சமூகப் பிர­தி­நி­தி­க­ளி­ன தும் மக்­க­ளி­னதும் கருத்­துக்­களை அறிய வேண்­டிய தேவை ஜனா­தி­ப­திக்கு இருப்­ப­தா­லேயே 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­னது எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தாகும். அக்­கட்­சி­யா­னது பல சந்­தர்ப்­பங்­களில் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க…

Read More

இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம்  நுகர்வோர் அதிகார சபை நேற்று கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More