Main News
றிஷாதை வரவேற்ற ஆயிர கணக்கான இளைஞர்கள்
வவுனியா விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் றிஷாதை வரவேற்ற ஆயிர கணக்கான இளைளுர்கள்.
மட்டு இளைஞனுக்கு ஆணுறுப்பினூடாக நெஞ்சினுள் பாய்ந்த கம்பி
சவூதியில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போது, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார். குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நாட்டை நேசிக்கும் அனைவரும் திரள்க – ராஜித
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதும் யுகத்தை ஏற்படுத்த அணி திரளுமாறு நாட்டை நேசிக்கும் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடை பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையயழுத் திட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடிந்தது. 100 நாள்களில் தியாகங்களை…
பொதுபல சேனா போட்டியிடும் மாவட்டங்களின் விபரம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு, பொதுஜன முன்னணியூடாக 17 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். களுத்துறை வேட்பாளர் அணியின் தலைவராக ஞானசார தேரர் களமிறங்கவுள்ள அதேநேரம், கம்பஹா அணியின் தலைவராக அவ்வமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே போட்டியிடுவதாகவும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட அணித் தலைவராக விதாரந்தெனிய நந்த தேரர் பெயரிடப்பட்டுள்ளார். -dc
பலசேனாவை எதிர்த்த வட்டரக்க தேரர் கொழும்பில் போட்டி
தேசிய சக்தி அமைப்பின் தலைவரும், பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தவருமான வட்டரக்க விஜித் தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் நவ சமசமாஜ கட்சி சார்பிலான இவரது வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. D c
அமீர் அலி வேட்பு மனு தாக்கல்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
அம்பாறை அ.இ.ம.கா. போராளிகள் வேட்புமனு தாக்கல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொத்துவில் SSP அப்துல் மஜீத் அ.இ.ம.கா இன் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக வேட்பாளர் நியமனப்பத்திரத்தை சற்று முன்னர் கையளித்தார். வேட்பாளர் நியமனம் செய்வதற்கு முன்னர் இடம்பெற்ற துஆப்பிராரத்தனையில் கல்வியலாளர்கள் உலமாக்கள் ,அகில இலங்க மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர், மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
இந்த சிறுவனின், சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்
புறகஹதெனிய பொல்வத்தை கிராமத்தில் வசிக்கும் சகோதரர் ஹசன் அவர்களின் புதலவர் முஹம்மது ஹசன் ராஹீத் என்பவருக்கு வாய் பேசவும் காது கேட்வும் முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 ½ வயதுடைய இந்தச் சிறாரின் வைத்திய செலவுக்காக ரூபா 28 இலட்சம் ரூபா செலவாகுமென வைத்திய நிபுணரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இந்தச் சிறாரின் பெற்றோர்கள் இந்த செலவை ஈடுசெய்ய முடியாமல் மிகவும் கஷ்ட நிலைக்குப் பின்தள்ளப்பட்டள்ளனர். இந்த வைத்திய சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு தாராள…
வேட்புமனு நிறைவு.. ஐ.தே.க கொழும்பு வேட்பாளர்கள்
ஐ.தே.கட்சியில் கொழும்பில் கேட்கும் வேட்பாளர்கள் விபரம். 1.ரணில் விக்கிரமசிங்க 2.ரவி கருணாநாயக்க 3.விஜயதாச ராஜபக்ச 4.ஹர்ஷா த சில்வா 5.ரோசி சேனாநாயக்க 6.எரான் விக்கிரமரட்ன 7.சுஜீவ செனசிங்க 8.மஞ்சு ஸ்ரீ அரங்கள 9.நிரோஷன் பாதுக்க 10.முஜிபுர் ரஹ்மான் 11.எஸ்.எம்.மரிக்கார் 12.உபுல் ஷாந்த சன்னச்கல 13.உதார ரத்நாயக்க 14.ஜயந்த த சில்வா 15.சுனேத்ரா ரணசிங்க 16.ஸ்ரீநாத் பெரேரா 17.லேனார்ட் கருணாரத்தன 18.மனோ கணேசன் 19.எஸ்.குகவார்த்தன் 20.பெரோசா முசம்மில் 21.ஹிருனிகா பிரேமசந்திர 22.சம்பிக்க ரணவக்க
சுசில் குழுவினர் வேட்பு மனு தாக்கல்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விமல் வீரவம்ச மற்றும் டினேஸ் குணவர்த்தன ஆகியோர் இவருடன் சென்றனர். நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுசில் பிரேமஜெயந்த இன்று காலை பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து திரும்பினார்.
அமைச்சர் றிஷாத் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்
சற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமானறிஷாத் பதியுதீன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் யஹ்யாபாய் மற்றும் ஜெயதிலக ஆகியோர் றிஷாத் பதியுதீனுடன் வருகை தந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படம்
சிராஸ் மீராசாஹிப் வேட்பு மனுவில் கையொப்பம்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார். கடந்த காலங்களில் ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புரிந்த சிராஸ் மீராசாஹிப் மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார்.
