Main News
மஹிந்தவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் எதிர்காலமொன்று இல்லை என்பதனால் ‘ராஜபக்ஷ’ என்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வாக்கு கோருவதற்கு உறுதியான ஒரு பிரதேசத்தை தெரிவு செய்து கொள்ள முடியாத ஒரு அரசியல்வாதி பற்றி அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர்…
நோன்புப் பெருநாள் பிறை பார்த்தல், தொடர்பான அறிவித்தல்
கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை பிரதி மாதமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடி தலைப்பிறையைத் தீர்மானித்து வருகின்றன. அவ்வகையில் எதிர்வரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக ரமழான் 29 ஆம் நாள் (2015.07.17 ஆம் திகதி) வெள்ளிக்கிழமை மாலை சனியிரவு அவ்வமைப்புக்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடவுள்ளன. ஜம்இய்யாவின் மாவட்ட , பிரதேசக் கிளைகள் தங்களது கிளைகளுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் அன்றைய நாள் பிறை பார்க்கும்…
வன்னியில் 3 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெறுவோம் – றிஷாத் பதியுதீன்
எமது மக்களுக்கு இந்த அரசியல் அதிகாரங்களை கொண்டே அனைத்தையும் செய்ய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் (யானைச் சின்னத்தில் போட்டியிடும்) அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வேட்பு மனுத்தக்கல் செய்த பின்னர் வவுனியாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில் நாம் புதிய அரசியல் காலாசாரத்தை தோற்றுவித்து செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் சில அரசியல் வாதிகள் அந்த கலாசாரத்தை அகற்ற முனகைின்றனர்.அது அவர்களது கனவு என்பதை சொல்லிக்கொள்ள…
பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க மாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர் அனைத்து மக்களின் ஜனாதிபதி என்பதால் பிரசாரப் பணிகளில் பங்கெடுக்கமாட்டார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் பூர்த்தியடையும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நேரடியாகவோ தபால் மூலமாக கிடைக்கப் பெறும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க – அ.இ.ம.கா கூட்டணி: மட்டக்களப்பு மக்கள் வரவேற்பு
நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றது இதில் முதன்மை வேட்பாளராக உள்ள முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியையும் அவருடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நேற்று (13.07.2015) வரவேற்பு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு ஜூம்ஆ பள்ளிவாயல் ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்,வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல், மீறாவோடை,…
மனித நேயம் கொண்ட ஒரு தலமையின் கீழ் போட்டியிடுவதையிட்டு பெருமையடைகின்றோம்
அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். பிரமான்டமான வாகனத் தொடர் அணியாகச் சென்று அக்கட்சியன் பிரதம வேட்பாளராகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட் மற்றும் வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் அம்பாரை…
அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை உள்ளது -S.M.M.இஸ்மாயில்
எம்.சி.அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று முஸ்லிம் அரசியலில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்திக்கின்றது. அதிலும் முஸ்லிம்கள் செரிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை. அதற்காகத்தான் முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் தகுதியான பலம்வாய்ந்த அணியின் மூலம் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் எமது கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றும். என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்….
அன்வர் இஸ்மாயில் எனும் சிங்கத்தின் இழப்பை ஈடுசெய்வோம்
அஸ்லம் எஸ்.மௌலானா இன்று இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாச்சாரம் தோன்றியுள்ளது, நல்லாட்சியின் அத்தனை சிறப்புக்களையும் சுவைக்கின்ற தாய் நாடாக இலங்கை எதிர்காலத்தில் பயணிக்க தயாராகி விட்டது. ஆனால் நமது பிராந்தியத்தில் மாத்திரம் இதன் பெறுபேறுகளை காண முடியாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை எமது சமூகம் உணர்ந்து மாறாத வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இவ்வாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.முஹம்மது இஸ்மாயில் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்…
தோல்வியடையச் செய்து மஹிந்தவை அனுப்பி வைப்போம்
இம்முறை விசேட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய முதன்மை வேட்பாளர் சமூகமளிக்க வில்லை. குறைந்தளவு வேட்பு மனுத்தாக்குதலுக்காவது மாவட்ட முதன்மை வருகை தர வேண்டும். இது குருநாகல் மக்களுக்கு சொல்லுகின்ற ஒரு நல்ல செய்தியாகும். இந்தப் போட்டி சுத்தமானவர்களுக்கிடையேயும் அசுத்தமற்றவர்களுக்கிடையே நிலவும் போட்டியாகும் .சுத்தமுடையவர்கள் நல்லாட்சியை வழிநடத்திச் செல்பவர்கள். அசுத்தமான அணியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் அணியிலுள்ள ஏனையவர்களுமாகும். இந்த தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்திருப்பது கடந்த காலத்தில் கடுமையான ஊழல்…
இன்று மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை
பொதுத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரை நேற்று (13) நிகழ்த்தப்படவிருந்த போதும், இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
றிஷாதின் அம்பாறை வருகை! கதிகலங்கிய மு.கா.
நஸீர் -அட்டாளைச்சேனை அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான றிஷாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பு மனுவை இரத்துச் செய்வதற்கு இன்று எடுக்கப்பட்ட முயற்சியின் மூலம் அந்த சதித் திட்டம் அம்பாறை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாதினால் உருவாக்கப்பட்ட ஹூனைஸ் பாறுக் – இனவாதிகளோடும் இனவாத…
