Headlines

மஹிந்தவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை!




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் எதிர்காலமொன்று இல்லை என்பதனால் ‘ராஜபக்ஷ’ என்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் வாக்கு கோருவதற்கு உறுதியான ஒரு பிரதேசத்தை தெரிவு செய்து கொள்ள முடியாத ஒரு அரசியல்வாதி பற்றி அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *