Main News
மரண தண்டனையை அமுல்படுத்த, ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க
மரண தண்டனை மீளவும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்த பிரேரணை ஒன்று எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். பிரேரணையாக அல்லது ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணையாக முன்வைப்பதா என்பது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவுபடுத்தி அவர்களின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…
மரண தண்டனையை வலியுறுத்தும், ஆர்ப்பாட்டதில் கலந்துகொள்ள அழைப்பு
மரண தண்டனையை வலியுறுத்தும், ஆர்ப்பாட்டதில் கலந்துகொள்ள அழைப்பு
தந்தை ஆசைப்பட்ட அமைச்சு, மகனுக்கு கிடைத்தது
தந்தை எதிர்பார்த்த அமைச்சுப் பதவி எனக்கு கிடைத்துள்ளதாக பெருந்தேட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் காணி மற்றும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என நவீன் திஸாநாயக்க தலவாக்கலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தனது தந்தை காமினி திஸாநாயக்க இந்த அமைச்சு பதவியை எதிர்பார்த்திருந்தார். அந்தக் காலத்தில் காணப்பட்ட மிகவும் பலம்பொருந்திய அமைச்சு பெருந்தோட்டத்துறை அமைச்சாகும்….
விசாரணைகள் பூர்த்தி.. ஜனாஸாவை நல்லடக்கம் செய்யப் படுகிறது
ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார். தாஜூடீனின் சடலம் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர். கடந்த மாதம் 10ம் திகதி தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. சடலத்தை எதிர்வரும் 18ம் திகதி மீளவும் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். தாஜூடீனின் மூத்த சகோதரி பாதிமா…
நாட்டில் மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுங்கள் – சிங்கள ராவய
பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நிறைவேற்றுவதற்கு மாத்திரம் தனியான விஷேட சட்டமொன்றினை நிறைவேற்றுமாறும் சிங்கள ராவய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது தடைசெய்யப்பட்டால் மாத்திரமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு வேண்டுகோள்…
புலமைப் பரிசில் வினாத்தாளில் சிக்கலான கேள்வியால் சர்ச்சை
நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த சிக்கலான கேள்வி ஒன்றினால் மாணவர்களும், ஆசிரியர்களும் அசெளகரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை எந்த மாகாணத்துக்கு உரியது என்று இந்தமுறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் வினா ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.அளவையியல் திணைக்களத்தின் படி, சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கு உரியது. ஆனால் வரைபடத்துக்கு அமைய இது மத்திய மாகாணத்துக்கு உரியதாகக் காணப்படுகிறது. எனவே இது சிக்கலுக்குரிய ஒரு வினா என்று…
ரணில்- மோடி சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் : அனுரகுமார
இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என தமிழர் தரப்பினருக்கும் சர்வதேச தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் உள்ளக விசாரணை பொறிமுறைகளை பலப்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடுமையானதாக அமையும் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இலங்கையின்…
25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு
நகரங்கள், கிராமங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் பொறுப்பினை தன்னிடம் முன்னெடுக்குமாறு பிரதமரும் ஜனாதிபதியும் பணித்துள்ளதாக தெரிவித்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ வீட்டுப் பிரச்சினைகளை கண்டறிய ஒவ்வொரு பிரதேச மாவட்ட மட்டத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இல்லாது பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றன. இந்தப் பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பெரும் பொறுப்பை…
அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு
அடுத்த ஐந்து வருட காலத்தில் மிகவும் துன்பகரமான தோட்டப்புற லயம் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு அனைத்து வசதிகளுடனும் கூடிய மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்கவுள்ளோம் என மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது மலையகத்திற்கு எந்தவொரு அபிவிருத்தியையும் கொண்டுவராத அராஜகப் போக்கிலான அரசியலை நாம் மீண்டும் தொடரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றதன்…
சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசாரணைகளை பலப்படுத்தும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை குறித்த சர்வதேச தலையீடுகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தவறியேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிடின் தொடர்ந்தும் மஹிந்தவின் ஆக்கிரமிப்பில் நாடு இருந்திருந்தால் எமது இராணுவ வீரர்கள் நிச்சயமாக சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது…
ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
