Headlines

புலமைப் பரிசில் வினாத்தாளில் சிக்கலான கேள்வியால் சர்ச்சை




நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த சிக்கலான கேள்வி ஒன்றினால் மாணவர்களும், ஆசிரியர்களும் அசெளகரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாதமலை எந்த மாகாணத்துக்கு உரியது என்று இந்தமுறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் வினா ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.அளவையியல் திணைக்களத்தின் படி, சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கு உரியது.
ஆனால் வரைபடத்துக்கு அமைய இது மத்திய மாகாணத்துக்கு உரியதாகக் காணப்படுகிறது.  எனவே இது சிக்கலுக்குரிய ஒரு வினா என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *