Main News
நீதி பெற்றுத் தாருங்கள் ;ஜெனீவா சென்ற முஸ்லிம் தாய் (video)
2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – நாம் மட்டும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வறுமையினை காரணம் காட்டி கல்விக்கு முடிச்சு போடவோமெனில் எமது சமூகம் 3 ஆம் தரத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கல்வி மற்றும் சமூக நலன் மேம்பாட்டுக்கான…
அமான் அஸ்ரப் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் (Photo)
– அஸ்ரப் ஏ சமத் – மறைந்த தலைவா் எம். எச்.எம் அஸ்ரபின் 15வது வருட வபாத்த தினமான நேற்று இரவு கொழும்பு திம்பிரிகாசாயாவில் உள்ள அமான் அஸ்ரப் இல்லத்தில் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டாா். இந் நிகழ்வின் போது அமைச்சா் றிஷாதும் கலந்து கொண்டாா்.
மாதாந்த சம்பளத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கிய அமைச்சர் றிஷாத்
– எஸ்.எச்.எம்.வாஜித் – மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 16வது வருட ஞாபகார்த்த நாளான இன்று (16)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் 130 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். தலைவரின் ஞாபகார்த்த நாளில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த சமூக பணி தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் இதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார். இவ்வாறான சதகத்துல்…
ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து பதற்றமில்லை : ரணில்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அவர், ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டு மற்றம்…
5வயது சிறுமி படுகொலை: விசாரணை சி.ஐ.டியிடம்
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட 5 வயதான சிறுமியின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார். கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை…
சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொர்பில் 24 மணிநேரமும் முறையிடலாம்
சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், 1929 மற்றும் 1938 போன்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக முறையிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த சேவையானது காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்திரமே செயற்பட்டதாகவும் தற்போது…
பரிந்துரைகள் பாரதூரமானதாக அமையாது பிரதி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையில் பாரதூரமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் பரிந்துரைகள் பாரதூரமாக அமையாது. பாரதூரமான அத்துமீறல் விசாரணைகள் வலியுறுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய உள்ளக விசாரணைகளை பலப்படுத்தி அதனூடாக சந்தேகங்களை தீர்க்க அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மீதான விசாரணை அறிக்கை பாரதூரமான வகையில் அமையும் என…
இலங்கை குறித்த அறிக்கை பயங்கரமானதாகவே அமையும் – உதய கம்மன்பில
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் விசாரணை அறிக்கை இலங்கை இராணுவத்தை பழிதீர்க்கும் வகையில் அமையும். அதேபோல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்புவதாக தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அதிகாரப்பகிர்வு விடயத்தை சர்வதேச அரங்கில் தீர்க்க முயற்சிப்பது ஏன்? தமிழர் பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பு எதற்காக? இப்போதிருக்கும் அரசியல் அமைப்பின் மூலம் தீர்க்க முடியாத தமிழ் மக்களின் பிரச்சினை என்ன? எனவும் அவர் கேள்வி…
இலங்கை குறித்த விசாரணை அறிக்கை இன்று ஜெனிவாவில் வெளியீடு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது. இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஐகிகிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். இந்த விசாரணை அறிக்கை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் படி ஐந்து நாள்…
கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை
முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல வாக்கு மூலம் வழங்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகம் ஒன்றில் கட்டணம் செலுத்தாது விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சங்கக்கார இல்லாதது நட்டமாகும் – நரேந்திர மோடி கவலை
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலேயே மனிதர்கள்- மனிதர்களுக்கு இடையில் உறவை தக்கவைத்து கொள்வதற்காக முயற்சிப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, கிரிக்கெட் மைதானத்தில் இல்லாமையானது எங்கள் எல்லோருக்கும் நட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைய்தராபாத்தில் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சில காலத்துக்கு…
