Main News
பிரதியமைச்சர் அமீர் அலி கடமைகளை இன்று பெறுப்பேற்பு
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணயின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன்மையாக தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றதையடுத்து அவர் நாளை திங்கட்கிழமை தமது கடமையினை ஆரம்பிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த நிகழ்வு புன்சி பொரள்ளையில் அமைந்துள்ள அமைச்சில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ACMCயின் நன்றி நவிலும் நிகழ்வுகளும், மக்கள் பிரதிநிதிகளின் அனுபவப் பகிர்வும்
– அபூ அஸ்ஜத் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை மையப்படுத்தியே தமது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒக்டோபர் மாதமளவில் கட்சியின் செயற்பாடுகள் விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளான சூறாவளி சுற்றுப் பயணத்தின் போது மாவடிப்பள்ளியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்…
இந்திக குணவர்த்தன காலமானார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான இந்திக குணவர்த்தன தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் அஷ்ஃரப் கண்ட கனவை நனவாக்கும் பயணத்தில் பின்நிற்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்
– எம்.சி.அன்சார் – பெருந்தலைவர் எம்.எச்எம். அஷ்ஃரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் நோக்கிய பயணத்தில் எதிர்காலங்களில் எவ்வாறான சவால்கள், சதிகள், தடைகள் வந்தாலும் அச்சமில்லாமல் முன்னோக்கி பயணிக்க அகில இலங்கை மக்கள் கட்சியும். அதன் தலைமையும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்நிற்கப் போவதில்லை. என அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் கட்சிக்கு வாக்களித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்…
மக்கா விபத்தில் இலங்கையர்கள் எவரும் சிக்கவில்லை
மக்கா ஹரத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவும் காற்றின் காரணமாகவும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு அருகில் (நிர்மாணப்பணிகள் செய்யும்) கிறேன் ஒன்று உடைந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் நூறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ள நிலையில் .. உயிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் இலங்கை பிரஜைகள் எவரும் இல்லை என முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் அவர்களின் அந்தரங்க செயலாளார் பாஹிம் ஹாசிம் அவர்கள் சற்றுமுன் தெரிவித்தார்.
மக்காவில் அனர்த்தம் – இலங்கை ஹாஜிகள் தொடர்பில், விபரங்களை பெற நடவடிக்கை
– இக்பால் அலி – மக்காவில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான நிலவரங்களை உடன் பெற்றுத் தருமாறு இலங்கை சவூதி அரேபியாத் தூவராலயத்திலுள்ள உதவித் தூதுவர் அன்சார் அவர்களிடம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தொலைபேசியில் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது இருவருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான விபரங்களை உடன் பெற்றுத் தருவதற்கு…
இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தியாவின் 50 க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில்,வர்த்தகம்,விசாயம்,மருந்தகம்,கட்டிட நிர்மாணிப்பு,ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம்,சக்தி வளத்துறை சார்ந்த…
2022 ஆம் அண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக மாறும்
பிரான்ஸ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 66 மில்லியனாகும். .இதில் 6 மில்லியன் முஸ்லிகள் இருப்பதாக ஒரு குறிப்பு உறுதி செய்கிறது. மேலும், பிரான்ஸில் இஸ்லாத்தை புதிதாக ஏற்போர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் முஸ்லிம்களின் எண்ணிக்கை பிரான்ஸில் அசுர வேகத்தில் உயரும் என்றும் அறியமுடிகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரன்ச் நாவல் ஆசிரியர் மைக்கேல் ஓபக் கூறியுள்ளார். 2022 பிரானஸ் இஸ்லாமிய நாடாக…
மஹிந்தவை புகழ்கின்றார் மைத்திரி
பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப்…
தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் குறித்து மோடி ஆராய்வு
இலங்கையின் தலைமன்னாரையும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரை வழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி…
சஷிந்ர ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தற்போது விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சு பதவியை, நிராகரித்த அரசியல்வாதி
மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து கடமையாற்றத் தாம் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சுப் பதவி சிறிபால கம்லத்திற்கு வழங்கப்படவிருந்தது. நேற்று நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கம்லத் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
