Headlines

திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வேட்புமனுவை இன்று காலை  (14)  கிண்ணியாவிலுள்ள, மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில், மக்கள்  காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் இறுதி செய்தனர்.

Read More

முள்ளிப்பொத்தானை மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- முள்ளிப்பொத்தானை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள், நேற்று முன்தினம் (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில், கட்சி போராளிகளின் பங்குபற்றுதலோடு, முன்னாள் மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரபின் காலத்திலிருந்து இற்றைவரை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில்…

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான அறிவித்தல்!

-ஊடகப்பிரிவு- மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில், இது வரை கட்சித் தலைமை எந்த இறுதியான முடிவையும் மேற்கொள்ளவில்லை. வேட்பாளர் தெரிவு இன்னும் நிறைவு பெறவும் இல்லை. இந்த சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்தப்பட்டு, இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அரக்கியால பாடசாலை மைதானம் புனரமைப்பு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், குருநாகல், அரக்கியால முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் இருந்த, அரக்கியால பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காக இருபது இலட்சம் ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

தொழில் முயற்சியாளர் விருது விழா!

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும், கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (11) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், தயா கமகே, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 22 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்…

Read More

பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தினருடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் உயர் அதிகாரிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (12)  அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வான் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.        

Read More

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வழிகாட்டி வெளியீடு!

-ஊடகப்பிரிவு- ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது படிப்படியாக விபரிக்கும் அகல் விரிவான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான “ஐரோப்பிய ஒன்றிய GSP+ வணிக வழிகாட்டி” என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த வழிகாட்டி கையேடு, ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச வணிக மையமும் [ITC], இலங்கை அரசாங்கமும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டி கையேட்டை இப்போது இணையத்தளத்தில் பார்வையிடலாம். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…

Read More

“புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பால் கிழக்கில் பாரிய மாற்றம் ஏற்படும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித்- புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கிலும், ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி அமைச்சர அமீர் அலி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை திங்கட்கிழமை (11) செலுத்தினர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கோறளைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுகின்றது….

Read More

பிறைந்துறைச்சேனை அல்/இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா!

-முர்ஷித்- சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் / இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது  பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம்…

Read More

கண்டி மாவட்டத்தில் வேரூன்றும் மக்கள் காங்கிரஸ்! மயில் சின்னத்தில் தனியாக போட்டியிடவும் ஆலோசனை!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சிப் பணிகளை விரிவுபடுத்தியதனை அடுத்து, அந்த பிரதேசத்தில் உள்ள பல சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.காதரின் (கம்பளை காதர் ஹாஜியார்) மருமகன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்களான நசார், உடையார், ஹனீபா ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…

Read More

திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் மாவட்டங்களின் பெரும்பாலான சபைகளில் மக்கள் காங்கிரஸ் மயிலில் குதிக்கின்றது!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செயலாளர் எஸ்.சுபைர்தீன், அந்தந்த மாவட்டங்களின் செயலகங்களில் செலுத்தியதாகவும் மக்கள் காங்கிரசின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளை மேற்கு பிரதேச சபை, ஏறாவூர் பற்று பிரதேச சபை, காத்தான்குடி நகரசபை ஆகியவற்றிலும், திருகோணமலை…

Read More

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் மயில் சின்னத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கட்டுப்பணம்…

-ஊடகப்பிரிவு-    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று (11) அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பொறுப்பாளரும், சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச…

Read More