Headlines

வவுனியா தவசிகுளம் மற்றும் காத்தார்சின்னக்குளத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான வரதராஜ் துரைராஜ், வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து நேற்று முன்தினம் (04) தவசிகுளத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வேட்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், இணைப்பாளர் பர்ஹான், ஓய்வு பெற்ற…

Read More

சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு வஜயம்!

-முர்ஷித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, அம்பாறை, சவலக்கடை, சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு ஒன்று கடந்த சனிக்கிழமை (03) விஜயம் மேற்கொண்டது. இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முன்னாள் உபவேந்தர் கலாநிதி  இஸ்மாயில், மருத்துவ கலாநிதி பரீட் உள்ளிட்ட வர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, தாறுல் ஹிக்மா அரபுகல்லூரி, அல் ஹூதா ஜூம்ஆபள்ளி ஆகியவற்றின் புனர்நிர்மாணம்  மற்றும் குடியேற்ற கிராம மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்களும்…

Read More

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிரணிக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சம்மாந்துறை மல்கம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிருக்கான  கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். டாக்டர்.ஹஸ்மியா இங்கு உரையாற்றுகையில், எமது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. அதனைத் தட்டிக் கேட்கின்ற ஒரே…

Read More

‘சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீன  நகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’ சிலாவத்துறைக் கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-சுஐப் எம்.காசிம்-  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை….

Read More

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே” சிலாவத்துறையில் பிரதமர் தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம்- புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷட் பதியுதீன் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர் என்றும், முசலிப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் அயராது உழைத்து வருகின்றார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முசலிப் பிரதேச சபையில், மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மேலும் கூறியதாவது, விடுதலைப் புலிகளினால் இந்தப்…

Read More

‘மு.காவின் ஜம்பம் இனியும் பலிக்காது’ வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரிஷாட்!

    -ஊடகப்பிரிவு- 17 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையோ உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் செலுத்தாமல், காலத்துக்கு காலம் வாக்களித்து வந்த கிழக்கு முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்கியுள்ளார். எனவே, முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து, முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் அநாதைகளாக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக…

Read More

“இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே நாங்கள் வரவேண்டிய நிர்ப்பந்தம்” முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல என அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (04) அக்குரணை 06ஆம் கட்டையில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர்…

Read More

“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்துமாறு கிண்ணியா, மூதூரில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

  -ஊடகப்பிரிவு-   முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார்….

Read More

மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், நிந்தவூா் மாந்தோட்டம் வட்டாரத்திற்கான மகளிரணிக் கூட்டம் மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கு,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையில்அண்மையில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உட்பட ஏராளமான பெண்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில், பெண்களுக்கு தேர்தல் சம்பந்தமான விழிப்பூட்டல் வழங்கப்பட்டது. அத்துடன் இந்தப் பிரதேசங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும்  கலந்தாலோசிக்கப்பட்டது. இதேவேளை,…

Read More

சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் பெண்கள் மாநாடு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு தழுவிய ரீதியிலான அரசியல் பிரவேசத்தில் முக்கியமாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கு பற்றுதலே ஆகும். அந்தவகையில்,  இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 60:40 எனும் விகித அடிப்படையில் வகுத்தைமைக்கப்பட்ட கலப்பு தேர்தல் ஒன்றில், பெண்களின் அரசியல் பிரவேசம் மொத்தமாக 25% கொண்டு காணப்படல் வேண்டும். குறிப்பாக, எமது பிரதேச சபை 20 உறுப்பினர்களும் 25% பெண்கள் அடங்கலாக, அதாவது 5 பெண்கள் நேரடியாக சபைக்கு தெரிவு செய்யப்படுவதனையே இங்கு…

Read More

‘விவசாயிகள் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- விவசாயிகளாகிய நீங்கள் உரங்களை பெறுவதற்காக கிரானுக்குச் சென்று கைகட்டி நிற்கின்ற, பேசாமடைந்தைகளாக, கொத்தடிமைகளாக  இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.பி.ஜௌபரை ஆதரித்து, காவத்தமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஓட்டமாவடி…

Read More

‘நல்லாட்சி அரசை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் வழங்கிய பங்களிப்பினை ஜ.தே.க ஒருபோதும் மறந்துவிடாது’ காவிந்த ஜயவர்தன எம்.பி!

-ஊடகப்பிரிவு- இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத்  பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய  தேசிய கட்சி  மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவின்த ஜயவர்தன, மறைந்த எனது தந்தை அமைச்சர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவர எண்ணிய கனவினை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து நனவாக்குவதற்காக செயற்படப்போகின்றேன் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை  வருகைத்தந்த பாராளுமன்ற  உறுப்பினர், மாந்தை மேற்கு பிரதேச…

Read More