Headlines

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் பெற்றுத்தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர் ஐ.எஸ்.மொஹிடீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் 03 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 04 ஆசனங்களையும், துணுக்காய் பிரதேச…

Read More

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் காங்கிரஸும் வாக்குகளும் ஆசனங்களும்!

கடந்த 10 ஆம் திகதி  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை  மாவட்ட முஸ்லிம்வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்துள்ள  வாக்குகளின் அடிப்படையில்  அமைச்சர்  ரவூப் ஹக்கீம்  தலைமையிலான  முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து  காணப்படும் நிலையில் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தலைமையிலான  அகில  இலங்கை  மக்கள் காங்கிரஸின்  வளர்ச்சி சற்று அதிகரித்துள்ளதை  அவதானிக்க  முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் 10 உள்ளூராட்சி சபைகளில் 9 சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், காரைதீவு பிரதேச சபையில் மரச் சின்னத்திலும் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மொத்தமாக 66, 563 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் இக்கட்சிக்கு 55…

Read More

மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த மகளிரணியை பாராட்டுகின்றார் டாக்டர்.ஹஸ்மியா!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக என்னோடு தோழோடு தோழ் நின்று பாடுபட்ட மக்கள் காங்கிரஸின் மகளிரணி அமைப்பாளர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தொிவிக்கின்றேன். அத்துடன், எமது கட்சியின் வெற்றிக்காக எமது பெண்கள் பல பிரதேசங்களில் நோன்பு நோற்று பிராா்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தொிவிக்கின்றேன். டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிரணி தேசியத் தலைவி

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது… பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது…

-ஊடகப்பிரிவு-   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 159க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 09 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது. மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வாக்களிக்கச் சென்ற வேளை..

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் பதிவு செய்தார்.      

Read More

‘மு.கா தலைமையை தட்டிக் கேட்டால் துரோகி என்று முத்திரைகுத்தி வெளியே தள்ளும் படலம் தொடர்கிறது’ அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழ சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், நற்பிட்டிமுனை, மருதமுனை பிரதேசங்களில் நேற்று (07) இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக கூட்டங்களில் கலந்துகொண்டு…

Read More

மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது மு.கா வெறித்தனமான தாக்குதல்!

மு.கா பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அடாவடித்தனம் தொடர்ந்தேர்ச்சியாக சம்மாந்துறையில் அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், சம்மாந்துறையில் இன்று (09) சின்னப்பள்ளி வட்டாரத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் தற்சமயம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக எந்தவித முறையான சிகிச்சையும் அளிக்கப்படாமல் ஆறாம் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வைத்தியசாலை நிர்வாகத்திலும் அரசியல் பின்புலத்தில் உரிய சிகிச்சை வழங்கக்கப்படாமல் இருப்பது…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்!

வடக்கு மக்களின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்தச் செயலணியின் ஊடாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேற முடியாது தவிக்கும் அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுத்து, அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செயற்பாடுகளுக்கு முசலி ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது. முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி தௌபீக் மதனி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பல சமூகங்கள் நிறைந்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ஜனாதிபதியின்…

Read More

கெகுணகொல்லையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்.. அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று மாலை (07) கெகுணகொல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More

அம்பாறையில் ஐந்து சபைகளை கைப்பற்றும் வாய்ப்பு எமக்குண்டு! ஐ.ம .கூட்டமைப்பு தலைவர் ஹசன் அலி!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் அரசியலில் எம்மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவனவாக அமையும். இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஐந்து உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றும் வாய்ப்புண்டு என்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும்இ முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹஸனலி உறுதிப்படத் தெரிவித்தார். நிந்தவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம்களின்…

Read More

அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி மாநாடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மகளிர் அணித் தலைவிகளுக்கான மாநாடு இன்று(07) பொத்துவிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்  மகளிர் அணித்தலைவிகளின்  ஊர்வலம் இடம்பெற்றதுடன், கவிதைகள் மற்றும் பாடல்களுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணித் தேசிய தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Read More

‘சமூகத்தின் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்க பின் நிற்கமாட்டோம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் திருமலையில் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- சமூகத்தில் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, வாளாதிருக்கமாட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெளி, கந்தளாய், தம்பலகாமம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அக்கூட்டங்களில் மேலும் உரை நிகழ்த்துகையில், வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அகதியாக இருந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இன்று…

Read More