Headlines

இலங்கையில் 15 வயதிற்கும் குறைவான 73 எயிட்ஸ் நோயாளிகள்

இலங்கையில் 15 வயதுக்கும்குறைந்த 73 எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். காலி மஹாமோதர வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் தர்சினி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இலங்கையில் மொத்தமாக 2133 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஊவா முதலமைச்சருக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஹரின் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சராக செயற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. . மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று நிராகரித்தது. ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சஷிந்திர ராஜபக்ஸ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி மேன்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட…

Read More

2015 க.பொ.த (உ/த) பரீட்சை நேர அட்டவணை வெளியீடு

அபூ ஷஹ்மா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lkஇலேயே இவ் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 4ம் திகதி முதல் 28ம் திகதிவரை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சாத்திகள் இன்று (20) முதல் விண்ணபிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.விண்ணப்பங்களை ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது பாடசாலை பரீட்சாத்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார். விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து குறித்த திகதிக்கு முன்னர் அதிபர் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி…

Read More

அல் – ஜின்னா பள்ளிவாயலுக்கு 10 இலட்சம் நிதி

அபு அலா அட்டாளைச்சேனை அல் – ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வெவ்வாய்க்கிழமை மாலை (19) பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது. பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்வைத்து கலந்துரையதடினார். இக்கலந்துரையாடலில் பள்ளிவாயல் செயலாளர் எம்.ஏ.ஜாபிர், உபதலைவர் யூ.எல்.எம்.சஹீட், பொறியியலாளர் எம்.மக்பூப் மற்றும் நிருவாக…

Read More

பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா பெயரில் வீதி!

கொழும்பு ஆனந்த மாவத்தையையும், கெட்டவலமுல்ல ஒழுங்கையையும் இணைக்கும் வீதிக்கு இன்று 19 ஆம் திகதி “பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாவத்தை” எனப் பெயரிடப்படவுள்ளது. கொழும்பு மாநகர சபை உட்பட பல அரச நிறுவனங்கள் இப்பணியில் பங்கேற்கவுள்ளன. இது தொடர்பான வைபவம் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பங்களிப்புடன் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்பாட்டுக்கு இணங்க, இராணுவத்தை வீரத்துடன் வழி நடத்தியமையைக் கெளரவித்து இந்த பெயர்…

Read More

ஹைபிரட் டெலிமெயில் வருகிறது

ஹைபிரட் எனும் பெயரில் புதிய டெலிமெயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக கூடுதலான டெலிமெயில் அனுப்பமுடியும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

க.பொ.த. (உ/த) 2014: மீள் திருத்த முடிவுகள் வெளியீடு

அபூ ஷஹ்மா கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின்படி மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்த 66,000 பேருக்கான முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் முடிவுகளை பார்வையிடலாம்.

Read More

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

சனாஸ் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரொருவரின் காலில் ஏறியுள்ளது.இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வண்டிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதன்பின்னரே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.காலில் காயபட்ட ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துறைமுகத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக, ஊழியர்கள் தங்களுடைய பைகளைக் கூட கொண்டு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….!!!

Read More

177, 224/1 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வீதி இலக்கம் 177 கடுவல – கொள்ளுபிட்டி மற்றும் வீதி இலக்கம் 224/1 கடுவல கம்பஹா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையற்ற வகையில் வீதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் சில வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக கெமுனு குறிப்பிட்டார்.

Read More

முகத்தை மூடும் தலைக்கவசம் : தடை உத்தரவு நீடிப்பு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதை தடை செய்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

Read More