Headlines

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, அமுலுக்கு வரும் சட்டம்

` போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும்…

Read More

தேஸ்ரன் கல்லூரி நீச்சல் தடாகத்திலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் பழைய மாணவரொருவரின் சடலமாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சஜின் வாஸ் மீண்டும் 17ம் திகதிவரை விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

மலையக தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள்

அப்துல் வாஹித் குத்தூஸ்  கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையகத்தின் பதினொரு மாவட்டங்களின் அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 3௦14 ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதற்கமைய மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த 2015/03/25 ந் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

Read More

தில்லையடி சிறுமி காமுகனால் கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுமி புத்தளம்…

Read More

வெளிநாடுகளில் இருந்து, இலங்கையின் அரச வங்கிகளில் 400 லட்சம் ரூபா பண மோசடி

போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் அரச வங்கிகளில் போலி வங்கி கணக்குகள் மூலம் 400 லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றத்தடுப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது. இவ்வாறு மோசடி செய்தவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Read More

2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி

சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது. wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன. இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres என்ற விடுதியினை குறித்த இணையத்தளம் பெயரிட்டிருந்தன.

Read More

இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை

மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்  இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், திஸ்ஸமகாராம பஸ் தரிப்பிடத்திலும் இலவச வைஃபை வலயம் நிறுவப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக களுத்துறை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களிலும் விரைவில் இலவச வைஃபை வலயங்களை ஏற்படுத்துவதற்கு…

Read More

2ஆம் வகுப்பில் பயணித்த 52 பேர் கைது

ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைதுசெய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 3 ஆம் வகுப்புக்கான பயணச்சீட்டை பெற்றுகொண்டு 2ஆம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 210ரூபாவை தண்டமாக அறவிட்டுள்ளதாகவும் ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மருதானை- மாத்தறை மற்றும் பொல்ஹாவலை-கல்கிஸ்ஸ ஆகிய ரயில்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ சார்பில் குருநாகல் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. 25,000 ரொக்கப் பிணையிலும் 25 லட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் முன்னாள் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இன்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சதோச நிறுவனத்தில் 50…

Read More

வத்தளையில் நடைபெற்றுள்ள, படு பயங்கரமான சம்பவம்..!

தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தின் 49 வயதான பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இனந்தெரியாத ஒருவர் அல்லது பலர் தமது இரத்தத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளையில் தாம் சுயநினைவிழந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் வத்தளை சென்அந்தனீஸ் தேவாலயத்துக்கு முன்னால் தாம் கைவிடப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டதாக பெண் குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று பணிக்கு செல்லும்…

Read More