Headlines

7 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 7 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலேயே நாளை  இரவு 10 மணியிலிருந்து தொடர்ந்து 7 மணித்தியால குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகிலிருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான வீதி மற்றும் அதனோடு தொடர்புபட்ட குறுக்கு வீதிகள் ஆகியவற்றிலும் செட்டியார்த்தெரு மற்றும்…

Read More

இந்திய மீனவர்களின் கைது தொடரும்

இலங்கை மீனவர்கள் பிரச்சணைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் இந்திய மீனவர்களின் கைது தொடரும் என தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர , எதிர்வரும் மே மாதத்தில் இந்தியா சென்று மீனவர்கள் பிரச்சணை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய நிதியுதவியின் கீழ் முல்லைத்தீவு மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் படகுகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான…

Read More

கழுகை கொலை : மேலும்ஆறு பேருக்கு விளக்கமறியல்

காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் கழுகு ஒன்றை உயிருடன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே…

Read More

எண்ணெய் கலப்படம் செய்தவருக்கு அபராதம்

தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணெய் வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி 5 ஆயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார். பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பிக்க ராஜபக்ச முன்னிலையில் நேற்று மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை மாநகரில் எம். சத்தியசீலன் என்ற எண்ணை வியாபாரிக்கே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டதாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, குறிப்பிட்ட நபருக்கெதிராக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்…

Read More

கரும்புத் தொழிலாளி சடலமாக மீட்பு

கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­படச் சென்ற தொழி­லாளி , சேனை வாடி­யொன்­றி­லி­ருந்து, சட­ல­மாக புத்­தல பொலி­ஸா­ரினால் நேற்று மீட்­கப்­பட்­டுள்ளார். பசறைப் பகு­தியின் கமே­வலை தோட்­டத்­தி­லி­ருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­ப­டச்­சென்ற எஸ்.சண்­முகம் என்ற 46 வயது நிரம்­பிய தொழி­லா­ளியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். இவ­ரது சடலம், வைத்­திய பரி­சோ­த­னைக்­காக, புத்­தல அர­சினர் மருத்­து­வ­மனை பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது. இம் மரணம் இயற்கை மரணமா? அல்­லது கொலையா? என்­பது குறித்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

கடும் வெப்பம்; பலர் நோயால் அவதி

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, மலை­ய­கத் தின் நீர்த்­தேக்­கங்கள் பல­வற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. கொத்­மலை நீர்த்­தேக்­கத்தில் 25 சதவீதம் வரை நீர்­மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­து டன், விக்­டோ­ரியா நீர்த்­தேக்­கத்­தின் நீர்­மட்டம் தற்­போது 50 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் இலங்கை மகா­வலி அதி­கா­ர­சபை குறிப்­பிட்­டுள்­ளது. காசல்றீ, மவு­சா­கலை மற்றும்…

Read More

‘முக்கோண ஹெரோயின் வர்த்தக வலையமைப்பின்’ புள்ளிகள் கைது

தெற்காசியாவின் இலங்கை, மாலை தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப் பொருள் வலையமைப்பொன்றின்  பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்துக்கு வெளியே வைத்து நேற்று   3 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு மாலைத் தீவு பிரஜைகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த முகோண வலையமைப்பின்…

Read More

மலையகத்தில் மழை

மலையகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக காணப்பட்ட கடும் வெப்பநிலையையடுத்து பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் இன்று மழை பெய்துள்ளமையால் சந்தோசமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொஸ்கொட, துவேமோதரவில் பொது இடத்தில் இருவர்  மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். இதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்தே மதுபோதையில் இருந்த இருவரும் சேர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்,…

Read More

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை பஷில் ராஜ­பக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்­கித்­தள்­ளி­ய­தோடு தம்மை முதன்­மைப்­ப­டுத்­தினர். இறு­தியில் இதற்­கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது என்று கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளார்.

அழ­கிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்­று­வது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்­கையில் அமை­யப்­போ­கின்­றது. முழு உல­கமே அனல் மின் நிலை­யத்­திட்­டத்தை கைவி­டு­கையில் இலங்கை மாத்­திரம் அதனை ஆத­ரிப்­ப­தை­யிட்டு சர்­வ­தேசம் வியப்­ப­டைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் உத்­தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்­தி­யா­விற்கு மின்­சா­ரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்­க­ளுக்கும் இயற்­கைக்கும் அழி­வைத்­தர போகின்­றது என சூழ­லி­ய­ளாலர் கலா­நிதி எப். ரணில் சேனா­நா­யக்க தெரி­வித்தார். சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீர­கே­சரி…

Read More

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ‘மின்சாரப் பரிசு’ வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்’ என்று கூறினார். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More