Headlines

சிகிரியாவுக்கு கூகுள் பலூன்

சிகிரியாவில் நாளை 31ஆம் திகதியன்று, 5 ஆயிரம் இளைஞர்களின் பங்குபற்றலுடன் கூகுள் பலூன் ஒன்று காட்சிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்தமுறை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும் கூகுள் பலூன், உண்மையில் உடைந்து விழுந்ததா அல்லது தரையிறக்கப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Read More

பம்பலபிட்டி மின்மாற்றியில் தீ : தொடரும் மர்மம்

பம்பலபிட்டி  லோரிஸ் வீதியிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியில் இன்று (29)  காலை திடீரென தீப்பிடித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரையும்  கண்டறியப்படவில்லை.

Read More

டிமென்ஷியா நோய் தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வு

முதுமையடையும் போது மூளையில் உள்ள அணுக்கள் செயலிழப்பதால் ஏற்படும் டிமென்ஷியா நோய் தொடர்பில்  அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடத்தப்பட்டது. மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஈ.ஈ.சீ விதானகமாச்சி தலைமையில் காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை அரச அதிகாரிகளுக்கும் 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை பொது மக்களுக்கும் டிமென்ஷியா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை அல்ஸிமஸ் மன்றத்தின் வைத்தியர் ஹர்ஷன இந்நிகழ்வில்…

Read More

கழுகை தொடர்ந்து மயில் வேட்டை : பொலிஸார் வலைவீச்சு

மயில்களை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரியுமாயின் 070 3303022 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்றிட்டங்கள்

இலங்கையிலுள்ள 18 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (28) காலை 9.30 மணிக்கு, கண்டி வத்தேக  சமூக சேவைகள் திணைக்கள தொழிற்கல்வி மத்திய நிலையத்தில் சமூக சேவைகள் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 12.30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வினையடுத்து உடற் சுகாதார நிகழ்வுகள், பரா ஒலிம்பிக் இலக்குபடுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகளுக்கான  மாவட்ட பயிற்சி மத்திய நிலையம்,…

Read More

72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களில்  சவூதியில் இருந்து 12 பேரும் குவைத்திலிருந்து 48  பேரும் கட்டாரிலிருந்து 12 பேரும் வந்தடைந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களில்…

Read More

சாரதியின் நித்திரை கலக்கத்தினால் வாகனம் தடம்புரண்டது : கட்டிடம் சேதம்

கொழும்பு அட்டன் பிராதான வீதியில் கித்துள்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற ஒருவர் கினிகத்தேன வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். கித்துள்கலை பொலிஸ்பிரிவிற்குட்பட்டு கலுகல பகுதியிலே இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி கலுகல சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமுற்ற சாரதி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் மலசலகூடம், பாடசாலை மதில் என்பன சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டம்

சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் இன்று வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Read More

மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது.!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் நேற்று இரவு சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read More

75 இலட்சம் ரூபா நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை கைது

75 இலட்சம் ரூபா இலங்கை நாணயத் தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில்  சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய், சார்ஜாவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 44 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கிருளப்பனையில் தீ விபத்து

கிருளப்பனையிலுள்ள கடையொன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், பிரதேச மக்கள் மற்றும் கிருளப்பனை பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Read More

ஜாஎல பிரதேசத்தில் மின்மாற்றி வெடிப்பு

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்தார். 

Read More