Headlines

வாகன வீபத்தில் 11 பேர் காயம்

அவிசாவளை ரண்வல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் அதற்கு எதிர் திசையில் வந்துள்ள கார் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படு காயமடைந்துள்ள காரின் சாரதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

மாட்டுவண்டி சவாரி மற்றும் யானை சவாரிக்கு தடை

சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின்போது மாட்டுவண்டி சவாரி போட்டி மற்றும் யானை சவாரி போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருக வதையை தடுக்கும் வகையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள சுற்று நிரூபத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

மதுபோதையில் ஓடினால் இனிமேல் ஓட முடியாது

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். ‘இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு தற்காலிக அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி வந்தோம். ஆனால், நேற்று முதல், அந்த நடைமுறையை அமுலில் இருக்காது….

Read More

மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!

கஷ்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தூர கிராம பாடசாலைகளின் மாணவர்களுக்கு இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் நலன்கருதியும், தரமான சீருடைகளை வழங்கும் நோக்குடனும் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 4,471 பாடசாலைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட சீருடைகளில் தரமற்ற புடவைகளுக்கு பதிலாக மாற்றீட்டு…

Read More

சிறைக்கைதிகளுக்கு புத்தாண்டு பரிசு

புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. புதுவருட தினத்தில் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை கைதிகள் உண்பதற்கு வாய்ப்பளித்த சிறைச்சாலை திணைக்களம் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்களின் எண்ணிக்கையில் இருந்த மட்டுப்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

தொடர்ச்சியாக எட்டு வாகனங்களை முட்டித்தள்ளிய பஸ்!

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

பதவி வெற்றிடம்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும்…

Read More

கடுவலை சுது கைது

பாதாள உலக தலைவர் கடுவலை வசந்த என அழைக்கப்படும் பல கொலைகளுடன் தொடர்புடைய நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை சுது என அழைக்கப்படும் பெல்லகே சுதத் கித்சிறி என்ற பாதாள உலக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை கொத்தலாவல, பங்களாவத்தை பிரசேத்தில் வைத்து பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

தெமடகொடை – காலிபுல்லை தோட்டப்பகுதியில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள்  வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (10) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தெமடகொடை மற்றும் மாலிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 21 வயதுடையவர்களாவர். சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாஜுதீனின் கொலையாளிகள் விரைவில் கைது!

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலர் இன்று (11) கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரம் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் றக்பி வீரர் வசிம் தாஜுதீன் மரணம் தொடர்பில் முக்கிய பிரபலங்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முக்கிய பலர்…

Read More

கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு.!

பிறக்கவிருக்கும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங்க முடியும்…

Read More

15 ஆம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிப்பு

பொதுவிடுமுறை தினமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இம் முறை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தமிழ் – சிங்கள புதுவருடம் வருகின்றமையால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More