Headlines

பிறந்து 45 நாளான சிசுவை தாக்கிய தந்தை

பிறந்த 45 நாட்களான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகலாக மாறி கோபமடைந்த கணவன் பிறந்து 45 நாட்கள் நிறம்பிய தனது குழந்தையின் தலைபகுதியில் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக மனைவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளார். நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த கணவன் தன்னை கெட்டவார்த்தைகளால் ஏசியதாகவும் தன்னையும் தனது…

Read More

கொழும்பில் டெங்கு அபாயம்

டெங்கு நுளம்பு கொழும்பு மாவட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறினார்.

Read More

யானை தாக்கி இருவர் பலி

அனுராதபுரம்  தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவத்தில் 55 வயது மற்றும் 52 வயதானவர்களே  உயிரிழந்துள்ளனர்.

Read More

தொடரும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தொடர்ந்து இதுவரையும் காணப்படுகின்றது. மேலும் , தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தேவையான அனுமதி பத்திரங்களையும் , கட்டணத்தையும் தயார் நிலையில் கொண்டு வருமாறு அதிகாரிகள் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More

கடலில் நீராடச் சென்ற இருவர் பலி

நாரமில பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நாரம்மல, தம்பகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியும், 26 வயதுடைய தாயொருவரும் என்று தெரிய வந்துள்ளது. சிலாபம் முன்னேஷ்வரம் கோயிலிற்கு தமது குடும்பத்தினருடன் வந்திருந்த நிலையில் கடலில் நீராடச் சென்ற வேளையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் இருவருடைய உடல்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு,சடலம் தற்போது…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அதிவேக வீதியை பயன்படுத்த முற்பட்ட பயணிகளினால் தெற்கு அதிவேக வீதியின் அருகாமையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  20 மீட்டர் தூரம் வரை  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

Read More

வீடொன்று மீது துப்பாக்கிச் சூடு

மாதம்பை, ஊரலிய பகுதியொன்றில் இனந்தெரியாத நபர்களால் வீடொன்று மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வீட்டிற்கு முன்பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,நேற்றிரவு 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்ட போது பட்டாசு சத்தம் என்று எண்ணி அது தொடர்பில் தாம் பொருட்படுத்தவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். சம்பவம் இடம்பெறும் போது வீட்டில்  மூன்று…

Read More

4 பொலிஸார் வைத்தியச்சாலையில்

மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பணியில் ஈடுப்பட்டு இருந்த 4 பொலிஸாரை வைத்திய பரிசோதணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் திருடப்பட்ட சம்பவம் இடம்பெறும் வேளையில் பணியில் இருந்த நால்வரும் மது பயன்படுத்தி இருந்தனரா என்று கண்டுபிடிக்கவே பரிசோதணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், துப்பாக்கிகளை திருடிச்சென்றவர் அணிந்திருந்த ஆடைகளின் நிறமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இந்நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள பதில் பொலிஸ்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் தொடரும் வாகன நெரிசல் ; மக்களிடம் வேண்டுகோள்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தொடர்ந்து இதுவரையும் காணப்படுகின்றது. மேலும் , தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தேவையான அனுமதி பத்திரங்களையும் , கட்டணத்தையும் தயார் நிலையில் கொண்டு வருமாறு அதிகாரிகள் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More

இலங்கையில் 818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிவு

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் அளவு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடகுறைந்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டின் பின்னர் அதிவேக பாதையில் ஏற்படக்கூடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  அதிவேக பாதையின் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான இயக்குனர் சமன் ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார். சி.சி.டி.வி கெமராக்கள் உதவியுடன் அதிவேக பாதையில் குடிபோதையுடன் உள் நுழையும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More