Headlines

விசேட போக்குவரத்துச் சேவை!

தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட பஸ் சேவை மற்றும் புகையிரத சேவைகள் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, நுவரெலியா, ஹட்டன், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ் விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விசேட சேவைக்காக 2000 மேலதிகமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பொது மக்களின் போக்குவரத்து வசதி கருதி தற்காலிகமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பஸ்,…

Read More

அரபுக் கல்லூரி மாணவரை காணவில்லை!

– அல்ஹாபிழ் M.R.M  ரிஷாத் – B 34/6, kotegoda, hemmathagama என்ற முகவரியை வசிப்படமாகக் கொண்டவரும் தேசிய அடையாள அட்டை இலக்கம்:  960953967 V மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் ஷரீஆப்பிரிவில் ஐந்தாம் தரத்தில் கற்கும் மேற்படி மாணவரை கடந்த ஐந்து நாட்களாகக் காணவில்லை. மெலிந்த உடற் தோற்றமும்,பொது நிறமுமுடையவர்.இலகுவான தாடியும் வைத்தருப்பவர்,அதிகமாக வெண்ணிற அறப் தோப் அணிந்திருப்பார். இவரைக் கண்டவர்கள், அல்லது விசாரித்தறிந்தவர்கள் அவரைக் காணாது கவலையால் துயருறும் தந்தை,மற்றும் சகேதரர்களுடைய தொலைபேசி இலக்கங்களுடன்…

Read More

காலி – மாத்தறை ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.!

ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் காலி வக்வெல்ல பகுதியில்  நேற்று (17) trainதடம்புரண்டது. இதனையடுத்து, காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.

Read More

லக்கலை விவகாரம்: விசாரணைகள் தீவிரம்

லக்கலை பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன ஆயுதங்கள் தொடர்பாக 100 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கலை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் உட்பட பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள மக்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணாமல்போய் பின்பு மீட்கப்பட்ட ஆயுதங்கள் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயுதங்களில் உள்ள கைரேகைகளை இனங்காண்பதற்காகவே குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி ஆயுதங்கள்…

Read More

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி!

பாதுக்க – முருதகஹஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,மரண பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியின் வத்தளை – மாபோலை பகுதியில் கொள்கலன் பார ஊர்தியொன்று மின் கம்பத்தில் விபத்திற்குள்ளானதினாலேயே பிரதான வீதி ஊடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது

புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வண்ணாத்திவில்லு காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் டேற்கொண்ட சுற்றவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சாரதிகளுக்கு ஓர் எச்சரிக்கை.!

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சாரதிகளுக்கு புள்ளியிடும் நடைமுறை இந்த வருடம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளியிடும் நடவடிக்கைக்கு ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடைமுறை சிக்கல்களை சரி செய்துக் கொண்டு இந்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். புள்ளியிடும் நடைமுறையின் ஊடாக சாரதிகளினால் இழைக்கப்படுகின்ற தவறுகளுக்கு புள்ளிகள் இடப்படுவதுடன், அந்த புள்ளி…

Read More

விரைவில் சுரங்கப்பாதை நிர்மாணம்.!

நீண்ட காலமாக கண்டி நகர பிரதேசங்களில் நிலவி வரும் வாகன நெருக்கடிகளைப் போக்குவதற்கு விரைவில் தென்னக்கும்பர பிரதேசத்திலிருந்து கெட்டம்பே வரையில் சுரங்கப்பாதை ஒன்றினை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்‑ ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Read More

938 பேர் வைத்தியசாலையில்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் காயமடைந்த 938 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பயிற்சிப் பிரிவின் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா கூறினார். எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் கூறினார்.

Read More

கொழும்பு வருவதற்கு மேலதிக சேவை.!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்காக மேலதிக பஸ் சேவையை இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட புகையிரத சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின்  1955, 011 1333…

Read More

அதிக கட்டணம் வசூலித்த பேரூந்து நடத்துனர்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட்டிருந்த விசேட பேரூந்து ஒன்றில் அசாதாரணமான முறையில் பயணிகளிடம் இருந்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கண்டி – ஹட்டன் வீதியில் பயணித்த பேரூந்து ஒன்றிலேயே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கண்டியிலிருந்து கினிகேத்தனவிற்கு 68 ரூபா அறவிடப்படும் எனினும் இப்பேரூந்து நடத்துனர் 250 ரூபா கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Read More