Headlines

ரமழானை முன்னிட்டு 113 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து தங்களுக்கு இது குறித்த உத்தரவு வந்துள்ளதாக கூறிய மலிர் ஜெயில் துணை சூப்பிரண்டு முகமது ஹூசைன் செஹ்டோ , புனித ரமழான் மாதத்தை  முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிக்குமாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  113 மீனவர்களும் லாகூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பின்னர்…

Read More

நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!

இஸ்லாமியர்கள் நோன்பு இருக்க தயாராகிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக ரமலான் நோன்பு மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணிநேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள். பொதுவாக பகல் நேரத்தில் உடலின் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு போதிய ஆற்றல் தேவைப்படும். ஆனால் ரமலான் நோன்பின் போது எந்த ஒரு உணவையும் சாப்பிடாமல் இருப்பதால், அவர்களின் உடலில் பகல் நேரத்தில் போதிய ஆற்றல் இல்லாமல் இருக்கும். எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல்…

Read More

சவூதி மன்னர் சல்மான் சூழுரை!

சவுதியில் ரமாளான் மாதம் ஆரம்பமாகி விட்டது இதனை தொடர்ந்து சவுதி மன்னர் சல்மான் தன்னை சந்தித்தவர்களிடையே உரையாற்றும் போது ரமாளானின் மாண்புகளை பற்றியும் அதில் நாம் பேண வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார் அவரின் உரையை அப்படியே தமிழில் தருகிறேன் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் ரமளான் மாதம் குர்ஆன் இறக்க பட்ட மாதம் அந்த மாதத்தை அடையகுடியவர்கள் அந்த மாதத்தில் நோன்பு வைக்கவேண்டும் என்று திருமறையில் பிரகடனம்…

Read More

கத்தாரில் தலைப்பிறை தென்பட்டது, நாளை நோன்பு

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ வசீம் அக்ரம் வளைக்குடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் ஹிஜ்ரி 1436 க்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தென்பட்டது. இதனடிப்படையில் (18-06-2015) நாளை வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்குமாறு கத்தார் இஸ்லாமிய அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய நாட்களில் 40 பாகை செல்சியஸில் வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரமழான் நோன்பு: ஐரோப்பாவில் 19 மணி நேரங்கள்!

இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தவகையில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் 18-19 மணி நேரங்கள்அங்குள்ள மக்கள் நோன்பு நோற்கின்றனர். அதிகாலை 02:30 தொடக்கம் மாலை 9:45 வரைக்கும், இன்னும் சில இடங்களில் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 9:30 மணிவரைக்கும், இன்னும் சில பிரதேசங்களில் இதனைவிட சில மணி நேரங்கள் அதிகமாக அல்லது குறைவாக நோன்பை நோற்கின்றனர். இந்தவகையில் ஐரோப்பிய…

Read More

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான்  பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, நாளை வியாழன் ரமழான்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் இதற்கிடையே நேற்று ரமழான்  பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நேர்மையாக நடந்து கொண்ட முஹம்மது நிப்ராஸ்!

சகல இலங்கையர்களுக்கும் பெருமையைத் தேடித்தரும் விதத்தில், கட்டார் நாட்டில் இலங்கை இளைஞரின் நேர்மை கட்டார் நாட்டின் பொது இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 90,000 கட்டாரி ரியால்களை இலங்கையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நிப்ராஸ் என்பவர் அவ்விடத்திற்கு உரிய பாதுகாப்பு அதிகாரியினூடாக போலீஸிடம் ஒப்படைத்ததையிட்டு கத்தார் நாட்டின் பாதுகாப்பு திணைக்களத்தின் Brigadier Nasser Jabr Al-Nuaimi அவர்கள் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டியதுடன், கத்தார் தலைமை பாதுகாப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை ரூபா சுமார் 32…

Read More

புத்தமத அறிஞர் சைலேந்தர் சிங் இஸ்லாத்தில் இணைந்தார்!

சைலேந்தர் சிங் இவர் இநதியாவை சார்ந்தவர் புத்த மத அறிஞர் வயது 33. இந்தியவில் பட்டபடிப்பை முடித்த அவர் மேல் படிப்பிர்காக மலைசியா சென்றார் மலைசியாவில் படித்து கொண்டிருந்த சைலேந்தர் சிங்கை பல்கலை கழகத்தில் தம்முடன் படித்து கொண்டிருந்து அரபு நாட்டு நண்பர்களின் நடைமுறைகள் ஈர்த்தது இதனை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றி ஆராய தொடங்கினர் சைலேந்தர் என்ற சிங் புத்த மத அறிஞர் பிறகு அவருக்கு துருக்கி செல்லும் வாய்ப்பபு கிடைத்தது துருக்கியில் அமைந்துள்ள ஹம்தி என்ற இறை…

Read More

உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்! – CNN

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமியரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டது இஸ்லாமிய நிறுவனம் அல்ல. இஸ்லாத்தை அழிக்க பல திட்டங்களை தீட்டி வரும் அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் சிஎன்என் நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 234 நாடகளில் இந்த ஆய்வு…

Read More

ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு: ஆசிரியை ராஜினாமா!

தலையில் ஸ்கார்ப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேரள சமாஜத்தின் நிர்வாகத்தில் ஜூபில என்ற பள்ளிக்கூடம் பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஷினா என்ற ஆசிரியைக்குக் கடந்த மே மாதம் வேலை கிடைத்தது. ஜூனில் பள்ளி திறந்ததும் ஹாஷினா வேலைக்குச் சென்றுள்ளார். தலையில் ஸ்கார்ப் அணிந்து வேலைக்கு வந்த ஆசிரியை ஹாஷினாவிடம் முதல் நாளிலேயே, “இதற்குப் பள்ளி நிர்வாகம்…

Read More

தலைமைத்துவத்திற்கு தகுதியான சவூதி மன்னர் சல்மான் …!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவுக்கு அண்மையில் மொராக்கோ நாட்டு மன்னர் வருகை தந்தார். அவரை வரவேற்க மன்னர் சல்மான் விமான நிலையம் சென்றார். இருவரும் சந்தித்து கொண்டபோது பத்திரிக்கையாளர்கள் முந்திக்கொண்டு படம் பிடிக்க முயன்றனர். அந்த சந்தர்பத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரியை பணி நீக்கம் செய்து வேறு ஒரு அதிகாரியை அதிரடியாக நியமித்தார்…

Read More

ஜெரூசலத்தை இஸ்ரேலாக ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இஸ்ரேலால் அக்கிமிக்கப் பட்ட, பலஸ்தீன பூமியான  ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலஸ்தீன பூமியான ஜெருசலத்தை, இஸ்ரேலாக அங்கீகரிக்கும் இந்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும்…

Read More