Headlines

1000 இற்கும் அதிகமான ரஷ்யர்கள் ISIS இல்

ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் அபாயம் இருப்பதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் வெளிவரும் கொம்மெர்சாண்ட் (business daily) என்ற நாளிதழுக்கு அந்நாட்டு பாதுகாப்புக் கவுன்சில் தலைமை அதிகாரியான நிக்கொலை பட்ருஷேவ் அளித்த நேர்காணல் நேற்று  திங்கட்கிழமை வெளியாகி இருந்தது. அதில் தற்போது ISIS இற்காகச் சண்டையிட்டு வரும்…

Read More

மரண தண்டனை ஆடையுடன் வந்த முர்ஸி

மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் முர்சி முகம்கொடுத் திருக்கும் ஐந்து வழக்குகளில் ஒன்றான கட்டார் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவே ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்ற சிறைக்கூண்டுக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கு ஆஜர்படுத்தப்பட்டிருந்த ஏனைய பிரதிவாதிகள் முர்சிக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர். ஏற்கனவே முர்சி மீதான…

Read More

துபாயில் பிச்சை எடுத்த 70 பேர் பிடிபட்டனர் !

ரமழான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஸகாத்’ எனப்படும் தான-தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமழான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மஸ்ஜித்கள் , மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 70 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் பெண் ஒருவர்….

Read More

அகதிகளை அரவணைத்து அவர்களுடன் நோன்பு திறந்த துருக்கி அதிபர்!

துருக்கியில் சிரியாவை சார்ந்த முஸ்லிம்கள் அதிக அளவில் அகதிகளாக உள்ளனர் அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் செய்து வரும் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் நேற்யை தினம் கிழக்கு துருக்கியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து அகதிகள் முகாமில் உள்ள மக்களுடன் அமர்ந்து நோன்பு திறந்ததோடு அந்த மக்களுடன் அன்பாக கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி கூறிய துருக்கி அதிபர் அகதியாக உள்ள முஸ்லிம்களின் குழந்தைகளின்…

Read More

சவூதி மன்னர் சல்மானினால் DR ஜாகிர் நாயக் கெளரவிப்பு!

ரியாத்தில் இடம்பெற்ற கிங் பைசல் விருது வழங்கும் விழாவில் சவூதி மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஜிஸ் அவர்களினால் இந்தியாவை சேர்ந்த DR ஜாகிர் நாயக்கிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்! இதன் போது 24 கேரட் கொண்ட 200 கிராம் தங்க பதக்கம், மற்றும் 750,000 சவூதி ரியால்கள் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 21 லட்சம் ) மற்றும் அரபி மொழியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. DR ஜாகிர் நாயக் (Islamic Research Foundation) இஸ்லாமிய…

Read More

சீனாவில் முஸ்லிம்கள் ரமழான் நோன்பிருக்க தடை!

சீனாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமழான் நோன்பு பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமழான் நோன்பிலிருந்து விலகி…

Read More

முதியோர் மற்றும் முடியாதோர் இனி இலகுவாக ஹஜ் ,உம்ரா!

அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான காபா ஆலயத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் புனித உம்ரா பயணத்திற்காக செல்கிறார்கள். அவ்வாறு செல்லக்கூடிய மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உம்ரா செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் நான்கு சக்கர புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் அமர்ந்த படியே புனித உம்ரா கடமையை நிறைவு செய்யலாம், புதிய வாகனத்தை மக்காவின் தலைமை…

Read More

கத்தாரில் இஸ்லாமியக் கருத்தரங்கு

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை உலகம் கண்டு வரும் இக்காலத்தில் இஸ்லாத்தின் தனித்துவக் கோட்பாடுகள் பரவலாகப் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும். அதனால் இஸ்லாத்தின் மீது பூசப்படும் பொய்யான சாயங்கள் கழுவப்பட்டுப் போகும். இந்த அடிப்படையில் ‘இஸ்லாத்தில் நடுநிலைக் கோட்பாடு’ என்ற தொணிப் பொருளில் கத்தாரில் உள்ள இலங்கை இஸ்லாமிய மையம் 22.23.24.25.26 ஆகிய தினங்களில் ஐந்து நாட்கள் தொடரான ஒரு கருத்தரங்கினை ‘துமாமா’ வில் உள்ள மஸ்ஜித் ஆயிஷாவில் ஒழுங்கு செய்துள்ளது. இக்கருத்தரங்கு அஸர் தொழுகை…

Read More

ரமழான் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது! ஒபாமா பெருமிதம்!

அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது மனைவி மிச்செலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஒபாமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த முறை இப்தார் நிகழ்வுக்காக முஸ்லிம்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த அழைப்பின் மூலம் அமெரிக்க சமூகங்களின் பன்முகத் தன்மை மற்றும் தேசப்பற்றும் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் தமது வழிபாட்டு சுதந்திரத்தை அனைவரும் மதித்து பகிர்ந்துகொண்டமையும் என்னுள் மீளவும் நினைவூட்டப்படுகிறது….

Read More

சவுதியில் பணிபுரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது: “சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். அதற்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு…

Read More

கட்டார் மஸ்ஜித்களுக்கு  அருகாமையில் A/C வசதியுடன் இப்தார் கூடாரங்கள்!

-எம்.வை. இர்பான் தோஹா- கட்டாரில் பல பாகங்களிலும் நோன்பு திறப்பதற்கான பெரிய, சிறிய அளவிலான இப்தார் கூடாரங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அமைக்கபட்டுள்ளது. அப்படி தோஹா ஹிலால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கூடாரத்தை படத்தில் காணலாம். இதில் A/C வசதி செய்யப் பட்டுள்ளது. இவற்றை தொண்டர் நிறுவங்கள், தனியார் கம்பனிகள் , மற்றும் தனி நபர்களின் அனுசரனையுடன் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ரமழான் நோன்பு கடைப்பிடிக்க ஹிந்துக்கள் முடிவு!

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வாழும் ஹிந்துக்கள், தங்களுடைய அண்டை வீடுகளில் வாழும் முஸ்லிம்களுடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, லக்னெüவில் புந்தேலி சமாஜ் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாரா பட்கர் கூறியதாவது: “மஹோபா நகரில் உள்ள உதால் செக் பகுதியில், வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம் சமூகத்தினருடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளோம். 60 நபர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேரி, இஃப்தார்…

Read More