‘வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாற வேண்டும்’ டாக்டர் ஹஸ்மியா!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சியும் அதன் எதிர்கால வெற்றியும் வடக்கில் மாத்திரமின்றி கிழக்கின் எல்லாப் பிரதேசங்களிலும் உறுதியாகி விட்டன. அந்த வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாறிக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்புக்களுக்கான கூட்டங்கள் கல்முனை, மாவடிப்பள்ளி, இறக்காமம், மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்றன. இறுதியாக கல்முனை மகளிர்களுக்கான கூட்டத்தில் கலந்து…
