Headlines

தேர்தல் காரியாலயத் திறப்பு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் நாஸரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா அண்மையில் (09) வட்டாரக் குழுத் தலைவர் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இதேவேளை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தேர்தலில்  மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும்…

Read More

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (14) குருநாகலில் இடம்பெற்றது. குருநாகல் மாநகர சபையின் முதன்மை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் எம்.எம்.அமீன் மற்றும்  பட்டியல் வேட்பாளர் இக்பால் ஷரீப்தீன் உட்பட குருநாகல் மாநகர எல்லையில் போட்டியிடும் சக வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More

வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம் இன்று (14) வரிப்பத்தன்சேனையில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.            

Read More

அட்டாளைச்சேனை அல் முனீரா வட்டாரத்தில் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அட்டாளைச்சேனை பிரதேச சபை, அல் முனீரா வட்டாரம் 06ஆம் பிரிவில்  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ​அல் முனீரா வட்டாரத்தின் வேட்பாளர் ​எம்.எல்.எம் ​றியாஸின்​ தலைமையில் இன்று (14) இடம்பெற்றது. இதன்போது, முன்னாள்  பிரதேச சபை உறுப்பினரும், வேட்பாளருமான மனாப்​ மற்றும் வேட்பாளர்களான ​ மஹ்தூம்,​ தீனுல்லாஹ்,​ ​றபீக்,​ நீதிபதி கபூர், பாயிஸ் ஆசிரியர், தௌபீக் மௌலவி, மற்றும் கட்சியின் முக்கியஸதர்களும் கலந்துகொண்டனர்.      

Read More

 சம்மாந்துறை பிரதேச 06 ஆம் வட்டார மக்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை பிரதேசத்தின் 06 ஆம்  வட்டார மக்களுடனான கலந்துரையாடல் நேற்று மாலை (13) வேட்பாளர் ரியாஸின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் அதிதிகளாக முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட், மக்கள் காங்கிரஸின் மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா மற்றும் ஏனைய சக வேட்பாளர்களான டாகடர்.றஸீட்,நபீல்,சஹீல்,ஷிபான் ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.      

Read More

வவுனியா சூடுவெந்தபுலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா சூடுவெந்தபுலவு, பாவற்குளம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக  நேற்று மாலை (13) சூடுவெந்தபுலவு, பழைய குடிமனையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தக்  கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மத் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.    

Read More

இறக்காமத்தில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை  கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும். கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண…

Read More

வவுனியா புளிதரித்தபுளியங்குளத்தில் வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா, சாளம்பைக்குளம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று (13) மாலை இடம்பெற்றது. வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாகிர் ஆகியோரை ஆதரித்து புளிதரித்தபுளியங்குளம், ஹிஜ்ராபுரம், அரபாநகர் ஆகிய கிராமத்தை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும்  ஊர் முக்கியஸ்தர்களுடனான இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மட், தொழிலதிபர் ஆப்தின்,…

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வீட்டுக்கு வீடு தேர்தல்  பிர இக்றஃ வட்டாரத்தின் வேட்பாளர் வை.பி.எம். மஹ்தூமினின் தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினரரும், வேட்பாளருமான மனாப் மற்றும் சக வேட்பாளர்களான றியாஸ், தீனுல்லாஹ், றபீக் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸதர்களும் கலந்துகொண்டனர்.    

Read More

விருதோடை வட்டார வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில், விருதோடை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ.எம்.ஆசிக் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். வேட்பாளர் ஆசிக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் கட்பிட்டி பிரதேச சபை அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, தொழிலதிபர் நயீம் மற்றும் பலர்…

Read More

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  மாபெரும் மக்கள் பேரணியோடு தேர்தல் பிரசார   பொதுக்கூட்டம்  அண்மையில் புத்தளத்தில்  வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான அலி சப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைப்பாளருமான  ஆப்தீன் எஹியா மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.    

Read More

முதலைப்பாலி காரியாலய திறப்பு விழாவும் தேர்தல் பிரசார கூட்டமும்!

-ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் , முதலைப்பாலி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும்  வேட்பாளர் தௌபீக் அவர்களின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழாவும்,  பொதுக்கூட்டமும் அண்மையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் அமைப்பாளர் ஆப்தீன் எஹியா உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.    

Read More