Headlines

விமானநிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்




விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் விமானநிலையத்தின் பாதுகாப்பும் இதன்மூலம் பலப்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல குற்றங்கள் புரிந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் வசிக்கும்சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்வது இதன் மூலம்இலகுவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *