Headlines

அதிபர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நாடு முழுவதுமுள்ள அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெரிவிப்பதுடன் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அறிவிப்பதாகவும், விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்வதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப் பெரும உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று புதன்கிழமை (21.09.2016) காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டைப்…

Read More

யோசித்தவின் மனு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி…

Read More

சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சமூகத்தினரிடையே பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கப்படலாம்.எனினும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒரே மனபாங்குடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை. யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது. அதனை அடுத்து…

Read More

திருகோணமலையில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை

உருளு பூங்கா மற்றும் ஹபரனை – திருகோணமலை வீதியின் இருமரங்கிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பரவிய இந்த காட்டுத் தீயில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் காட்டுப் பகுதி தீயால் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்காட்டுத் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை…

Read More

கெஹலிய ரம்புக்வெலவின் மகன் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இரட்டைப் படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில்…

Read More

மட்டக்களப்பில் ரயில் விபத்து

மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து இடம்பெற்றது. குறித்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே விபத்துக்குள்ளானது. குறித்த ரயில்  புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், ரயில் இஞ்சின் மோதியதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார். இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன்,  ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும்  சேதமடைந்துள்ளன. இதன்போது, பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும்…

Read More

பொலிஸார் ஐவரை கைது செய்ய உத்தரவு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (21) உத்தரவிட்டார். மேலும், 5 சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

Read More

‘அலைபேசிக் கட்டணங்களுக்கான வரி நீக்கப்படும்’

-வி.நிரோஷினி – தொலைபேசிக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திறன்பேசி (smartphone) வழியாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டண வரியை, முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இணையம் மூலமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான கட்டண அறவீடு, நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனையை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலும் உள்ளவாங்க முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்….

Read More

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு மேஜர்ஜெனரல் கமால் புகழாரம்

சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன. தெரண தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ‘உயர்மட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு லெப்.கேணல் அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை…

Read More

சங்ககார முல்லைத்தீவுக்கு விஜயம்

வருடாந்தம் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில்ஆரம்பமாகியது. நேற்று மாலை (20) இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான குமார் சங்ககார விஷேட அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நாளைய தினம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது இப்போட்டியில் 23 அணிகளுக்கான போட்டிகள் ஆரம்பமாகும். இதில்…

Read More

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்….

Read More