Headlines

கிழக்கை வடக்குடன் இணைக்கக்கூடாது; கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளம்

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது. இதன்போது,  உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன. இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற…

Read More

பொர­லஸ்­க­முவ பள்­ளி­வாசல் மீதான தாக்குதல் தொடர்பில் அஸாத் சாலி

-எம்.ஆர்.எம்.வஸீம் – பொர­லஸ்­க­முவ  ஜும் ஆப் பள்­ளி­வாசல் மீதான தாக்குதல் சம்­பவம் தொடர்பில் பொர­லஸ்­க­முவ பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளோம். அத்­துடன் பொலிஸ்மா அதி­ப­ருடன் தொடர்­பு­கொண்டு சம்­பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று முன்­தினம் (6) மாலை சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் இடம்­பெற்ற செய்­தியை கேள்­வி­யுற்று அங்கு சென்­றி­ருந்த…

Read More

நெருப்புக்குள்ளே நின்று போராடும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது

-சுஐப் எம்.காசிம் – பெரும்பான்மை இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கிலே கடந்த ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழர்களும், முஸ்லிம்களும் தற்போதைய நல்லாட்சியிலும் ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்து, தொடர்ந்தும் நல்லுறவு பேணவேண்டியது காலத்தின் தேவையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத்  பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக் எழுதிய “முஸ்லிம் அரசியலின் இயலாமை” என்ற நூல் வெளியீட்டு விழா, கொழும்பு வை.எம்.எம்.ஏ அரங்கில் நேற்று மாலை (07/08/2016) இடம்பெற்ற போது பிரதம…

Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவசர கலந்துரையாடல்

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று  (8) பிற்பகல் ஈடுபடவுள்ளனர். குறித்த திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரியதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

இன்று தீர்வு கிட்டலாம்!

தமது கோரிக்கைகளுக்கு இன்று (8) எழுத்து மூல தீர்வு கிடைக்கலாம் என, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வேலை…

Read More

செலவு செய்பவன் ஒரு போதும் ஏழையாவதில்லை

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -அல்மதத் யா றஸுலல்லாஹ்- நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى القربي நபீயே! நீங்கள் கூறுவீராக. உறவினர்களில் அன்பு வைப்பதைத் தவிர வேறு எந்த ஒரு கூலியையும்…

Read More

விக்னேஸ்வ‌ர‌னிற்கு உல‌மா க‌ட்சி கண்டனம்!

முஸ்லிம் ம‌க்க‌ளுக்கு நிர்வாக‌ அல‌கொன்றை த‌ந்து விட்டு வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்க‌ வேண்டும் என்ற‌ வ‌ட‌மாகாண‌ ச‌பை விக்னேஸ்வ‌ர‌னின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. விக்னேஸ்வ‌ர‌ன் அவ‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ச‌பை முத‌ல்வ‌ரே த‌விர‌ அவ‌ர் கிழ‌க்குக்குரிய‌வ‌ர் அல்ல‌. அத‌னால் அவ‌ர் வ‌ட‌க்கின் அபிவிருத்தி ப‌ற்றி பேச‌ வேண்டுமே த‌விர‌ கிழ‌க்கை இணைக்கும் பேச்சை தொட‌ர்வ‌தை அவ‌ர் நிறுத்த‌ வேண்டும். முஸ்லிம்க‌ளுக்கு இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் ஒரு நிர்வாக‌ அல‌கு என்ப‌து மிட்டாயை கொடுத்து க‌ண்க‌ளைப்ப‌றிக்கும் முய‌ற்சியாகும்….

Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று – இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம்…

Read More

தாய்லாந்தில் பொது வாக்கெடுப்பு!

தாய்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடந்ததில் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவாக 61 சதவீதம் பேர் புதிய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் விதமாக ராணுவ ஆட்சிக்குழு உருவாக்கிய புதிய அரசியல் அமைப்பின் மீது நேற்று நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில், வரைவு அரசியல் அமைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? என்றும் துணைக் கேள்வியாக பிரதமரை தேர்வு செய்வதில் நியமிக்கப்பட்ட…

Read More

இனவாதிகளிடம் சிக்கிய முஸ்லிம் பாடசாலை!

– இக்பால் அலி – இனவாத ஆதிக்கம் நல்லாட்சியிலும் நிறுவனமய ப்படுத்த ப்பட்டுள்ளது என்பதற்கு ஹிரியுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்;டு மைதானப் பிரச்சினை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பள்ளிக் கூட மாணவர்களின்  விளையாட்டு மைதானம் என்று கூட கருணை காட்ட வில்லை.  பாடசாலை மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக பயன்படுத்தக் கோரி இனவாதிகள் மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக…

Read More

துருக்கில் மாபெரும் பேரணி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துருக்கியில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. துருக்கியில் கடந்த மாதம் 15-ம்தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சிப்படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி…

Read More

றிஷாதின் சமூக உணர்வைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன் – பிரபா கணேசன்

-சுஐப் எம். காசிம் – அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அட்டூழியங்கள் இடம் பெற்று சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நியாயம் கேட்டு கொதித்தெழுந்து நாட்டுத்தலைவரையே நிலை குலையச் செய்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனே என்று முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் இன்று மாலை தெரிவித்தார். சாய்ந்தமருது பன்னூல் ஆசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக்…

Read More