Headlines

சீ.எஸ்.என் மோசடி விவகாரம்: நிதியை இடமாற்ற உத்தரவு!

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு கடுவலை நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸாமிலுக்கு பிணை!

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த மொகமட் முஸாமிலைபிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொகமட் முஸாமில் சற்று முன்னர் முன்னிலையானபோதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில்கடந்த மாதம் 20ஆம் திகதி முஸாமில் கைது செய்யப்பட்டார்.

Read More

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது: பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும்…

Read More

ஈரான் அணு விஞ்ஞானி தூக்கில் போட ஹிலாரி கிளிண்டன்தான் காரணம்: டிரம்ப்

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசுவரரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை கடுமையாக தாக்கி வருகிறார். அவரை சாத்தான் என்று வசைபாடினார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்று பட்டம் சூட்டினார். தற்போது ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் தூக்கிலிடப்பட்டதற்கு ஹிலாரி கிளிண்டனே காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர்…

Read More

முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று -10- மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த…

Read More

இலங்கை வான்பரப்பில் மர்மம்: மக்கள் அதிர்ச்சி!

இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு (9) மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வேகத்துடன் குறித்த ஒளி மறைந்து சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி மறைந்து சென்ற சில நிமிடங்களில் புதுவகையான நறுமணம் ஒன்றை பிரதேசவாசிகளால் நுகரக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நறுமணம் மல்லிகைப் பூவின் நறுமணத்தை ஒத்திருந்ததாகவும், இதனை நுகர்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வண்டியின் சக்கரத்தை ஒத்ததாகவும்,சிவப்பு நிற…

Read More

ரியோ டி ஜெனீரோவில் பதற்றம்

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (10) டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது  சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி…

Read More

மஹிந்த தலை­மையில் விசேட தீர்­மானம்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­ப­தியின் நிபந்­த­னை­க­ளையோ கட்­சியின் கொள்­கை­க­ளையோ மீறி செயற்­படவில்லை. எனவே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையை எதிர்கொள்­ளவும் எதிர்கால நட­வ­டிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டவும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் கூட்டு எதிர்க்கட்­சி யின் அனைத்து உறுப்­பி­னர்­களும் வெள்­ளிக்­கி­ழமை விசேட சந்­திப்பை நடத்த உள்­ளனர். ஆறு நாள் விஜ­யத்தை மேற்­கொண்டு தென்­கொ­ரியா சென்­றுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு நாளை வியா­ழக்­கி­ழமை நாடு திரும்­பு­கின்­றது. தென்­கொ­ரி­யாவில் வாழும் இலங்­கை­யர்­களை சந்­தித்து நாட்டில் தற்­போ­துள்ள…

Read More

வருமானத்தை அதிகரிப்பது அவசியம் – துமிந்த

மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, வட்வரி திருத்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் துமிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நாட்டை முன்னேற்ற அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும்

நாட்டை முன்னேற்றுவதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (8) பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை வெற்றிக்கொள்வதுடன், அரசியல் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும், சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் மேல்மாகாணம் மற்றும் நாடு பூராகவும் அதிகமான ஆசிரியர்…

Read More

11 மாண­வர்கள் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு

க.பொ.த. உயர்­தர பரீட்சை மத்திய நிலை­யத்தில் தொழில்நுட்பவியல் பாடத்­திற்கு தோற்­றிய 11 மாணவர்களுக்கு இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்து வினாப்­பத்­தி­ரம் ஒன்று வழங்­கி­யமை தொடர்­பாக 11 மாண­வர்கள் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். வத்­து­காமம் கல்வி வல­யத்­தி­லுள்ள கண்டி, வலல மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்சை மத்­திய நிலை­யத்தில் ஒரு அறையில் பரீட்­சைக்கு சனிக்­கி­ழமை தொழில்­நுட்­ப­வியல் பாடத்­திற்கு தேற்­றிய 11 மாண­வர்­க­ளுக்கு இக்­கேள்விப் பத்­தி­ரத்தின் இரண்டாம் பகு­தியை இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்து வழங்­கி­யது தொடர்­பாக 11…

Read More

நகரங்களை மையப்படுத்தி 2 இலட்சம் வீடுகள்

2020ஆம் வருடத்திற்குள் இலங்கையின் நகரங்களை மையப்படுத்தி இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கபடும் என பிரமதர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கை தேசிய நகர வேலைத்திட்டத்தின் கீழ் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். பிரதமரின் ஆலாசகரான ஆர்.பாஸ்கரலிங்கத்தின் தலைமையின் கீழ் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுண் மகேந்திரன், வீடமைப்பு அமைச்சின் ஆலாசகர் டபிள்யு.அயிலப்பெரும மற்றும் சிறிவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கு அரசினால் வழங்கும் நிதிக்கு அப்பால் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளையும்…

Read More