Headlines

வாய்ப்பை தவறவிட்ட ஒன்றிணைந்த எதிரணி

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகச் சட்டமூலத்தில், ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திருத்தங்களுக்கமைய, மேற்படி சட்டமூலத்தின் 7ஆவது பக்கத்திலுள்ள 11ஆவது பந்தியின் 21ஆவது வரி முதல் 29ஆவது வரி வரையான பந்தி நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவின்றி, இராணுவ முகாமொன்றுக்கோ அல்லது வேறோர் நிலையத்துக்குள்ளோ நுழைவதற்காக அலுவலகத்துக்கிருந்த அனுமதி, தேசிய அல்லது சர்வதேச ரீதியில் நிதிப்…

Read More

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர்

முச்சக்கர வண்டி உட்பட அனைத்து வாடகை வாகனங்களுக்கும் மீட்டர் செயற்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. வாடகை வாகனங்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய இந்த திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் செயற்திட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மதுபானசாலைக்கு எதிரே, பள்ளிவாசலுக்கு காணி வேண்டாம் – முஸ்லிம் அமைச்சர்களுக்கு கடிதம்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென்று நகர அபி­வி­ருத்தி சபை ஒதுக்­கி­யுள்ள காணியை தவிர்த்து அதற்­கப்­பா­லுள்ள முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை 1982 ஆம் ஆண்டு சுவீ­க­ரித்துக் கொண்ட காணியைப் பெற்றுத் தரு­மாறு தம்­புள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மி­டமும் அரச தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாஷி­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தம்­புள்ள பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள காணி­யி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மது­பா­ன­சா­லைக்கு…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிர்ப்பு

-பாறுக் ஷிஹான்- யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்  பதியுதீன் விஐயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திடீர்   விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  அக்கிராமத்தில்  மீள் குடியேறிய ,  மக்களிடம்  சென்று கலந்துரையாடினார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12)  ஜும்மா தொழுகையின் பின்னர் மிக பின்தங்கிய கிராமமான  உள்ள யாழ் பரச்சேரி கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு…

Read More

சர்­வ­தேச மாநாட்டில் ரிஸ்வி முப்தி

பல்­லின மக்கள் வாழும்  இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ரான  முஸ்­லிம்கள் எவ்­வாறு ஏனைய  இன மக்­க­ளுடன்  சமா­தான சக­வாழ்வு வாழ­வேண்­டு­மென அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உலமா சபை  முஸ்லிம் சமூ­கத்தை  அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அதற்­க­மைய  இலங்கை  முஸ்­லிம்கள் அனைத்து இன­மக்­க­ளு­டனும்  நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ்­கி­றார்கள். இலங்கை, முஸ்­லிம்­களின் தாய் நாடு என்­பதில் நாம் உறு­தி­பூண்­டுள்ளோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். நேற்­றுக்­காலை அலரி மாளி­கையில் நடை­பெற்ற, முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும், எனும்…

Read More

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் தொடர்பில் – ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்குள் கடந்த சில வருடங்களாக முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மனநிலையுடன் முஸ்லிம் மக்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இலக்காக கொண்டு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தானத்திற்குள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாதத்தை பரப்பி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி…

Read More

மோடிக்கு, உவைசியின் விளாசல் (வீடியோ)

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார். குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது…

Read More

கபூரிய்யா அரபிக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம்-2016

கபூரிய்யா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்சியடைகிறோம். காலம் : 14-08-2016 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : காலை 09:30 இடம் : அப்துல் கபூர் ஹாஜியார் கேட்போர் கூடம் இன்ஷா அல்லாஹ் காலை 08:30 மணி முதல் பதிவுகளும், சரியாக காலை 09:30 மணிக்கு கூட்ட நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகும். கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்றை கூட்டத்திற்கு மிக மிக அன்பாக அழைக்கின்றொம்….

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத் சபாநாயகரிடம் கோரிக்கை

-சுஐப் எம்.காசிம்  – பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (12/08/2016) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு கௌரவ சபாநாயகர் அவர்களே: பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11/08/2016) இடம்பெற்ற  கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்திலான கேள்வி நேரத்தின்போது, வன்னிமாவட்ட பாராளுமன்ற…

Read More

நள்ளிரவில் மருதானை ஹோட்டலில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத்

-றிஸ்கான் முகம்மட் – நேற்று (10) நள்ளிரவில் கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சாதாரண ஹோட்டலில் அல்பா மஸ்ஜிதுல் ஹிதாயத் பள்ளிவாசல் நிறுவாக குழுவினர்ருடன் அமைச்சர் ரிசாத் பதீயுதின் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதை படத்தில் காணலாம்.

Read More

3 லட்சம் டொலர்களை வைப்பு செய்தால் இலங்கையில் 10 வருட வதிவிட வீசா

இலங்கையில் 3 லட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை…

Read More

றிஷாத்தைப் பாராட்டினார் ஹக்கீம்

அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத்…

Read More