Headlines

சீன அதிபருடன் ஆங்சான் சூகி சந்திப்பு

மியான்மரில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி, நாட்டின் வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த ராணுவ அரசு கொண்டு வந்த சட்டத்தினால் அதிபர் பதவி ஏற்க முடியாமல் போன ஆங்சான் சூகி, வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். இந்த நிலையில் ஆங்சான் சூகி அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு பல்வேறு உயர்மட்ட தலைவர்களை சந்தித்த அவர்,…

Read More

பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி

பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து…

Read More

கல்வித்துறையில் இலங்கை முன்னிலை – யுனெஸ்கோ

தென் ஆசிய வலய நாடுகளுள் கல்வித்துறையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பொக்கோவா தெரிவித்துள்ளார். சிறந்த கல்விக்காக ஆசிரியர் பயிற்சிகளை வழங்க கல்வி அமைச்சு பல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பாக அவர் கல்வி அமைச்சை பாராட்டியுள்ளார். இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயில் அமைந்துள்ள தென் ஆசியாவின் ஆசிரிய பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். தென் ஆசிய வலய நாடுகளுக்கிடையே இலங்கை கல்வித்துறையில் மேலோங்கி இருப்பதாகவும், பாடசாலைக்கு…

Read More

சு.கா மாநாடன்று மஹிந்த, இலங்கையில் இல்லை?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியன்று, குருநாகலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினரால் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரும் அவ்வழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு, மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன், எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர், இத்தாலி செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அங்கு செல்லும் அவர்கள், எதிர்வரும் 4ஆம் திகதியன்று, இத்தாலியிலுள்ள, சிங்கள…

Read More

போலி வீசா மற்றும் கடவுச்சீட்டு தயாரிக்கும் கும்பல் சிக்கியது

போலி வீசாவைப் பயன்படுத்தி ஆட்களை கனடாவுக்கு அனுப்ப தயாராக இருந்த சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கர விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200க்கும் அதிகமான போலி கடவுச்சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அந்த கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு நபரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை ஆகிய பகுதில்…

Read More

புதிய நாட்டுடன் ஒரே பயணம்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாமாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள், இன்று வெள்ளிக்கிழமை (19), மாத்தறையில் நடைபெறவவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், ‘புதிய நாட்டுடன் ஒரே பயணம்’ என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Read More

முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி உள்ளார். கடந்த அரசாங்கத்தில் அரச பொறியிலாலளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

பதவி விலகுவதாக டலஸ் அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். vk

Read More

துறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் விழும் – JVP

அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி  திட்டத்தின்  மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இதனை தெரிவித்தார்.  அவர்…

Read More

சப்ரகமுவ பல்கலையில் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள்.!

சப்ரகமுவ பல்கலைக்கத்தினுள் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் பொது மாணவ சங்க அமைப்பின் தலைவர் சமீர கப்புவத்த தெரிவித்துள்ளார். மாணவர் விடுதி, பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்கப்படல், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் அங்கு நிலவுவதாக மாணவ சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு குரல்கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை!

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் காணாமல் போனோர் அலுவலகம் விசாரணை நடத்தும். எதிர்காலத்தில் ஓர் அங்கமாக மனித உரிமைகளை கருதி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அலுவலகத்தின் அனைத்து பணிகளும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு…

Read More

தேசிய அரசாங்கத்தின் முதலாமாண்டு நிறைவு!

இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும். புதிய நாடு, புதிய பயணம் மற்றும் ஐந்து வருடங்களுக்கான பயணத்திற்கு முதலாண்டு நினைவாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளனர். சமகால அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை வெளிக்காண்பிக்கும்…

Read More