Headlines

கடல் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டிற்காக ஜப்பான் நிதியுதவி!

இலங்கையின் கடல் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டிற்காக 2.4 பில்லியன் ரூபா நிதியுதவியை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு உதவும் வகையில் ஜப்பான் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் ரோந்து சேவைகளை விஸ்தரிப்பதற்காக கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு இரண்டு படகுகளை கொள்வனவு செய்வதற்கும், கடற்கொள்ளை எதிர்ப்பு செயற்பாடுகள், நாடு கடந்த குற்றங்களைத் தடுத்தல், கடல் சூழல் மற்றும் வளங்கள்…

Read More

வியாழன் கிரகத்திற்கு மேல் மின்னும் ஒளிக்கோவை: நாசா தொலைநோக்கி படம் பிடித்தது

பூமியில் தோன்றும் வண்ணமிகு துருவ ஒளியான ‘அரோரா’ வியாழன் கிரகத்திலும் தோன்றியதை நாசாவின் நவீன தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. எண்ணற்ற அபூர்வ நிகழ்வுகளை உள்ளடக்கியது இயற்கை. அந்த அதிசய நிகழ்வுகளில் ஒன்றுதான் அரோரா எனப்படும் துருவ ஒளி. அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு அந்த கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது இந்த துருவ ஒளி வெளிப்படுகிறது. பூமியில் இந்த நிகழ்வு தோன்றுகிறது….

Read More

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மீட்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்து அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும்…

Read More

மட்டக்களப்பில் 251 ஹெக்டேயரில் சோளம் பயிர்ச்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் 16 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இம்முறை சுமார் 251 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இராசரெத்தினம் கோகுலதாசன் தெரிவித்தார். மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை, வந்தாறுமூலை, கிரான், ஏறாவூர், ஆயித்தியமலை, மண்டபத்தடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், மண்டூர், வெல்லாவெளி, தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளன. மேலும், சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 50…

Read More

மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி,  பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஆளுநர், தனது…

Read More

கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்   – கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப்  பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, தாமரைத் தடாகக் கலையரங்கில் 94 வது சர்வதேச கூட்டுறவுதின விழா இன்று (02/07/2016) நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதிதிகளாக பிரதி அமைச்சர் சம்பிக்க…

Read More

பிரார்த்தனையினாலும், ஒற்றுமையினாலுமே நமது சமூகத்தைப் பாதுகாக்க முடியும்

-சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார தேரர் மீது, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (01) கிண்ணியாவில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த சில வருடங்களாக…

Read More

குவைத்தில் தீவிபத்து: 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர். 23 பேர் காயம் அடைந்தனர். குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும்…

Read More

ஞானசார தேரர் மியன்மார் பயணம் !

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் ஞானசார தேரர் நேற்றைய தினம் (30) மியன்மார் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவரை சர்ச்சைக்குறிய அசின் விராது தேரர்  வரவேற்பு அளித்துள்ள அதேவேளை அங்கு தங்கியிருக்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மியன்மாரில் பெளத்த மதகுருமார்களை சந்திக்கவும் அங்கு இடம்பெறும் பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஞானசார தேரர் அங்கு சென்றுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.  

Read More

உங்கள் பிரதேசங்களில் இனவாத அச்சுறுத்தலா? – களத்தில் குதிக்க முஸ்லிம் சட்டதரணிகள் தயார்

-AAM. Anzir- முஸ்லிம் பிரதேசங்களில்  தற்போது புதிது புதிதாக உருவாகும் இனவாத அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயார் என் அறிவித்துள்ளனர். அந்தவகையில் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட  ஆர்.ஆர்.டி.அமைப்பின் தலை­வ­ர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் இதனை Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார். கீழ்வரும் இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ளலாம் SHAINAS MOHAMED 0767410287 SHAFRAZ HAMZA 0778198075 SAFEEN RAHIM 0771502043 RUSDHI HABIB 0774440019 அதேவேளை இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தயவுசெய்து…

Read More

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்

தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில்  வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார்.

Read More

டெங்கு பரவும் இடங்களின் உரிமையாளர்கள் 139 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மூன்று நாள் கொண்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளான நேற்று (30) நாட்டில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 18,000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

Read More