Headlines

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், இன்று (03) ஞாயிற்றுக்கிழமை, தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரதான சந்தேகநபர்…

Read More

தமிழ் மொழி கற்பிக்கும் விமலசார தேரர்

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள். அது பிற­ரோடு பழக உதவும். அடுத்­த­வரை அணுக உதவும். வெறும் மொழிப்­பித்து என்­பது உங்­களைக் கிணற்றுத் தவ­ளை­யாக்­கி­விடும். கிணற்றுத் தவ­ளையும் நீந்தும் உயிர்­வாழும். ஆனால், உல­கத்தின் அனு­ப­வமும் அளவும் அதற்குச் சிறி­ய­தாகத் தெரியும்” என முகம் கொள்­ளாத சிரிப்­புடன் எம்­மோடு பேசத் தொடங்­கினார் குட்­டிக்­கு­ளமே விம­ல­சார தேரர். “இந்த இனிப்­பான தரு­ணத்தில் சில விட­யங்­களை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்” என இலக்­கணத் தமி­ழில் தேன் சுவை­யாக கூறினார் 32 வய­தான…

Read More

அல்லாஹ் தொடர்பிலும், குர்ஆன் தொடர்பிலும் எவ்வேளையிலும் விவாதத்துக்கு தயார் – BBS

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்து மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா…

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாகபயன்படுத்தியமை தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விரைவில் ஞாயிறு தனியார் வகுப்புக்கு தடை

மத்திய மாகாணத்தில் ஞாயிறு தினங்கங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபையின் ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன்படி இந்த தடை இன்னும் இருவாரங்களில் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை…

Read More

7 வரு­டங்­க­ளாக தொழில்­ அதி­கா­ரிகள் வெற்­றிடங்கள் நிரப்­பப்­ப­ட­வில்­லை

தொழில்துறைசார் அதிகாரிகள் மாட்டு வண்டி யுகத்திலிருந்து விடுபட்டு புதிய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தொழில் அமைச்சில் 202 வெற்றிடங்கள் நிலவுகின்றன. கடந்த ஏழு வருடங்களாக எந்தவொரு வெற்றிடமும் நிரப்பப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரச சேவை ஊழியர் உத்தியோகத்தர் சங்கத்தின் 65ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து…

Read More

தலைப்­பிறை பார்க்­கும் மாநா­டு

ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நாளை 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்பு இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய மாலை 6.31 மணி­முதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறும் பிறையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் நேரிலோ அல்­லது கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களில் ஏதா­வது ஒன்றின் ஊடாக அறி­யத்­த­ரு­மாறும் சகல முஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரி­ய­பள்­ளி­வாசல் கேட்டுக்…

Read More

பொது பலசேனாவின், SLTJ இற்கு எதிரான வழக்கு : ஒத்தி வைப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பலசேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்­ளது. பொது பலசேனா சார்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு கடந்த வியா­ழக்­கி­ழ­மை கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜமாஅத்தின் தலைவர் ரியாழ், செயலாளர் அப்துர்…

Read More

மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு வாழ்த்து

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. நாட்டின் பணவியல் ஆணையம் புதிய ஆளுநரின் நியமனத்தின் பின் பொதுநம்பிக்கையை மீட்க உதவுவதுடன் அவரது 6 ஆண்டு சேவைக்காலத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அவரது முழு ஆதரவையும் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை,  நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உறுதிப்பாடு, சுபீட்சம் நோக்கிய புதிய மத்திய வங்கியின் ஆளுநரின்  முயற்சிக்கு  அனைத்து பங்குதாரர்களும் அதரவு வழங்க வேண்டுமென இலங்கை வர்த்தக சம்மேளனம்…

Read More

மனித கடத்தல் வியாபாரம்; இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் பதிவு

மனித கடத்தல் வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட பிரி­வுக்கு கடந்த இரண்­டரை மாதங்­களில் 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. எனவே எதிர்­கா­லத்தில் மனித கடத்தல் வியா­பா­ரத்தை முற்­றாக கட்டுப்படுத்த முடி­யு­மான நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்­துள்ளார். இது­தொ­டர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக விசேட பிரி­வொன்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்த விசேட பிரிவு ஆரம்­பிக்­கப்­பட்­ட­து­முதல் இது­வரை 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன….

Read More

பேராதனை பல்கலைகழக ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தப் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (3) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த கண்டி மாநகர சபையின் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர். தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

Read More

சவூதியில் 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் எகிப்தியர்கள் எஎன தெரிவிக்கப்படுகின்றது.

Read More