Headlines

காணாமல் போனோர் அலுவலகம் எதற்காக? மஹிந்த கேள்வி

காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினருக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு மத்தியில் அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் எனும் பெயரில் நிறுவனம் ஒன்றை அமைக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்….

Read More

அரச அச்சக மோசடி குறித்து உரிய நடவடிக்கை இல்லை!

அரச அச்சுத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தினால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அச் சங்கத்தின் செயலாளர் சரத் லால்பெரேராவால் பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் முன்னாள் மேலதிக அச்சகர் இணைந்து பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு, திணைக்களத்தில் உரிய நிர்வாகம்…

Read More

சமல் ராஜபக்ஷ அவுட்: மஹிந்தவுக்கு வாய்ப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷவே நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இவ்வாண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கடந்த இரண்டு கூட்டங்களிலுமே, சமல் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை. ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்தை அவர், ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே, அப்பதவிக்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு…

Read More

புதிய கெசினோவுக்கு இலங்கையில் இடமில்லை – பிரதமர்

கெசினோ சூதாட்டக்காரர்களுக்கு இலங்கையில் இடமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சிங்கபூர் வர்த்தகர்களை சிங்கப்பூரின் நெங்சிலா ஹோட்டலில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சந்திப்பின் போது வர்த்தகர் ஒருவர் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கெசினோ சூதாட்ட வர்த்தகர்களுக்கு இந்த ஆட்சியில்அனுமதி கிடைக்குமா? என பிரதமரிடம் கேட்டபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு கெசினோ வியாபாரத்தை ஆரம்பிப்பது நல்லாட்சியின் கொள்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

சீனி, உப்பு, ‘சீஸ்’ வரிகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் ராஜித

தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக சீனி, உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இனிப்பு பானங்களின் வகைகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி உணவிலுள்ள சீனியின் அளவை மக்கள் அறிந்து கொள்வதற்காக வர்ண அடையாளங்கள் அதில் குறிப்பிடப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 10 கிராமிலும் கூடுதல் சீனி பயன்படுத்தப்படுமாயின் சிவப்பு…

Read More

40,000 மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமை!

இலங்கையில் 13 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுள் 40,000 மாணவர்கள் இன்னும் புகைத்தலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனையானது கடந்த பல வருடங்களைவிட இந்த வருடங்களில் குறைவடைந்துள்ளதாக புகைத்தல் மற்றும் மதுபாவனை தொடர்பான தேசிய அதிகாரசபையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனை 8 வீதமாக காணப்பட்ட அதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு 3 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்த அதிகார…

Read More

இலங்கை இஸ்லாமிய மாநாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என அந்­நாட்டு பிர­தமர் லீ ஷியேன் லுங் தெரி­வித்­துள்ளார். நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­ரம சிங்­க­வுடன் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே அவர் இதனை தெரி­வித்­துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் சிங்­கப்பூர் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை தயா­ரித்து அமுல்ப்­ப­டுத்த ஆரம்­பித்­த­வுடன் பொரு­ளா­தார, சமூக ரீதி­யாக பாரிய வெற்­றி­களை இரு­நாடும் பெற்­றுக்­கொள்ளும் எனவும் அவர் தெரி­வித்தார். மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சிங்­கப்பூர்…

Read More

நாமல் மற்றும் ரஞ்சித் பாராளுமன்றில் விசேட உரை

அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

18,500 படையினர் சட்டரீதியாக விலகினர்

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, முப்படைகளையும் சேர்ந்த 18,500 பேர் சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர் என்று, அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த 18,500 பேரில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலதரப்புகளையும் சேர்ந்தோர் உள்ளனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம், ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் ஒருமாத காலத்துக்கு அமுலில் இருந்தது. இக்காலப்பகுதியில், இலங்கை தரைப்படையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்களாக 16ஆயிரத்து 920 பேரும், கடற்படையில் 831 பேரும்…

Read More

අර්ජුන් මහේන්ද්‍රන්ට යහපාලන ආණ්ඩුවේ ප්‍රධාන තනතුරක්

– නිලුපුලී – යහපාලනය සඳහා වූ ජාතික රජයේ ප්‍රමුඛතම වැඩසටහනක් වන රැකියා දස ලක්ෂයේ වැඩපිළිවෙළ ඇතුළු ඉදිරි සංවර්ධන ව්‍යාපෘති සියල්ල ඇතුලත් පස් අවුරුදු සංවර්ධන ව්‍යාපෘතියේ ප්‍රධානියා ලෙස ශ්‍රී ලංකා මහ බැංකුවේ හිටපු අධිපති අර්ජුන් මහේන්ද්‍රන් මහතා පත් කිරීමට රජය තීරණය කර තිබේ. ඉදිරියේදී ඉන්දියාව සමග අත්සන් කිරීමට යෝජිත ආර්ථික සහ තාක්ෂණික සහයෝගිතා ගිවිසුම (ETCA), ශ්‍රී ලංකාව…

Read More

ජනපති ප්‍රමුඛ ශ්‍රී.ල.නි.ප.ය පුංචි ඡන්දයට සැරසෙයි

–  නිලුපුලී – ඉදිරි පළාත් පාලන මැතිවරණයට සූදානම් වන ආකාරය සම්බන්ධයෙන් ශී‍්‍ර ලංකා නිදහස් පක්‍ෂයේ විශේෂ නියෝජිත හමුවක් ඊයේ එනම්  (ජූලි 19) රාති‍්‍ර ජනාධිපති මෛතී‍්‍රපාල සිරිසේන මහතාගේ ප‍්‍රධානත්වයෙන් කොළඹ පදනම් ආයතනයේදී පැවැත්වින. පළාත් පාලන මැතිවරණය 2017 වසරේ පළමු කාර්තුවෙදි පැවැත්වෙන බවද මෙහිදි ප්‍රකාශ වී ඇති අතර මෙහිදි ස්ථිර ලෙසම මීළඟ පළාත් පාලන ආයතන ඡන්දය ආසන…

Read More

ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை

-அமைச்சின் ஊடகப்பிரிவு – சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நைரோபி, கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் இடம்பெற்று வரும், ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் 14வது கூட்டத்தொடரில் இலங்கைக்குத் தலைமைத்தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரின் உரை மாநாட்டு மண்டபத்திலிருந்து ஐ.நா…

Read More