Headlines

மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

எதிர்வரும் மே தினத்தின் பின்னர் மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிக்கு விசுவாசமாக செயற்படும் தரப்பினர் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதேவேளை, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(smr)

Read More

சிரியாவுக்கு தரைப்படையை அனுப்ப முடியாது: ஒபாமா கைவிரிப்பு

சிரியாவில் ஐ.எஸ். கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரியா அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சிரியா விவகாரம் பற்றி கூறுகையில், “சிரியாவில் பஷார் அல் ஆசாத் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு அமெரிக்கா தரைப்படையை அனுப்பாது. அப்படி அமெரிக்காவோ, இங்கிலாந்தோ தரைப்படைகளை அனுப்பினால், அது தவறு ஆகும். இன்னும் 9 மாதங்களே நான் பதவியில் உள்ள நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்தி விட…

Read More

ராணி எலிசபெத் காதல் கடிதம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். சமீபத்தில் இவர் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். இங்கிலாந்தில் நீண்ட நாட்களாக ராணி பட்டம் வகிப்பவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இவரது கணவர் இளவரசர் பிலிப். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காதலர்களாக இருந்த போது இளவரசர் பிலிப்புக்கு ராணி எலிசபெத் காதல் சொட்ட சொட்ட கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் ஒரு கடிதம் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. 2 பக்கம் கொண்ட அக்கடிதம் ரூ.14 லட்சத்துக்கு ஏலம்…

Read More

கொழும்பில் மின் தடை!

கொழும்பு நகருக்கு மின் விநியோகத்தை வழங்கும் இரு மின் நிலையங்களின் இணைப்பில்  புதிதாக மாற்றம் செய்ய இருப்பதால் கொழும்பு நகரில் மின் தடை ஏற்படலாம் என மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் கொழும்பு நகருக்கு ஒரு இணைப்பின் ஊடாகவே மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த இணைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படலாம்  என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

Read More

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கவில்லை

எதிர்க்­ கட்சித் தலைவர் ஆர்.சம்­பந்தன் கடந்த ஏப்ரல் மாதம் கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள இரா­ணுவ முகா­மொன்­றுக்கு அத்­து­மீறி செல்ல முற்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித முறைப்பாடுகளும்  கிடைக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

Read More

யாழ். செல்கிறார் சுவீடன் அமைச்சர்.!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளி விவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் நாளைய தினம் (26) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காசிம்  – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று (25/04/2016 ) இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். யாழ் கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், சூழலியலாளர்கள்…

Read More

சாய்ந்தமருதில் அ.இ.ம.கா வின் கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரம்

– எம்.வை.அமீர் – சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாதர்களுக்கும் இளைஞர்களுக்குமான கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார். அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அண்மையில் சாய்ந்தமருதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் கிளைகள் அமைக்கப்பட்டு ஏ.எல்.எம் அன்வரை அமைப்பாளராக கொண்டு மத்திய குழுவும் அமைக்கப்பட்டது. ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதிற்கான 17 பிரிவுகளுக்கும்…

Read More

கம்போடியாவில் முழு கிராமமும் இஸ்லாத்தை ஏற்றது

கம்போடியாவில் ஒரு முழு கிராமும் இஸ்லாத்தை ஏற்றது. பௌத்த நாடான கம்போடியாவில் 2.4% முஸ்லிம்கள் உள்ளனர். ( மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்கள்) உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் நடந்தாலும், இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதிற்கு இதுவும் ஒரு சான்று. அல்லாஹு அக்பர்

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம்.காசிம்  – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து இயங்கச் செய்வதற்காக அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று காலை (25/04/2016) அந்தத் தொழிற்சாலை அமைந்துள்ள பிரதேசத்துக்குச் சென்று பார்வையிட்டார். சுமார் 687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்தத் தொழிற்சாலையின் கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் கிடந்ததைக் கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றிப் பார்வையிட்டார். அங்குள்ள பல்வேறு உபகரணத் தொகுதிகள், இரும்புக் கேடயங்கள், இரும்பு உலைகள் ஆகியவை, அண்மைக்…

Read More

நாட்டை பிளவுபடுத்த முடியாது – JVP

வடக்கு கிழக்கு இணைந்த தனி பிராந்தியம் அமைப்பதோ அல்லது சமஷ்டி என்ற கோட்பாடோ ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. சமஷ்டி முறையின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட முடியாது. மாறாக நாட்டில் பிரிவினைவாதமும் இனவாதமும் மட்டுமே உருவாகும். ஆகவே சமஷ்டி மூலம் நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கருத்துகளையும் நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று (24)…

Read More