Headlines

வாக்காளர் இடாப்பில் திருத்தம்

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேர்தல்கள் அதிகாரிகளாக செயற்படும், கிராம சேவையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். 25 மாவட்ட தேர்தல்கள் செயலகங்களையும் மையப்படுத்தி இந்த தெளிவூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் இடாப்புகளை மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி…

Read More

மொறட்டுவையில் விபத்து 24 பேர் படுகாயம்

மொறட்டுவ-கொரவெல்ல பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, சொகுசு பஸ், பாரவூர்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை, லுனுவில, பாணந்துறை வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை…

Read More

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் வாசுதேவ பங்கேற்க மாட்டார்!

கூட்டு எதிர்க்கட்சியினால் கிருலப்பயில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பங்கேற்க மாட்டார். கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது அதனை தந்திரமாக தவிர்க்க சில கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இவ்வாறு மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது தந்திரமாக அதனை தவிர்க்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, வாசுதேவ நாணயக்கார ஏற்கனவே கியூபா நோக்கிப்…

Read More

தாஜூதீன் கொலை: அரச சாட்சியாளராக முன்னாள் பொலிஸ் அதிகாரி

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையில் அரச சாட்சியாளராக மாற இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இணக்கம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, விசாரணை அதிகாரிகளிடம் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இன்னும் பொலிஸ் தரப்பு தமது முடிவை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ்…

Read More

மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு றிஷாத்தின் நேரடிப் பங்குபற்றலுடன் தீர்வு

நீண்ட காலமாக இழுபரிக்குள்ளான நிலையில் இருந்த யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டிருந்த, முட்டுக்கட்டையான பிரச்சினைகள் பலவற்றுக்கு யாழ் கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அமைச்சர் றிஷாத்தின் நெறிப்படுத்தலில், அவரின் நேரடிப் பங்கேற்புடன், யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற  நடவடிக்கைகளுக்கான அமைச்சர் றிஷாத்தின் பிரதிநிதி மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம்,…

Read More

மின்சார சபையின் யோசனையை பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரிப்பு

55 மெகாவோட்ஸ் அளவு சக்திவளத்தை கொள்முதல் செய்ய இலங்கை மின்சாரசபை முன்வைத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை கருத்திற்கொண்டு இந்த 55 மெகாவோட்ஸ் மின்சார கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத்தருமாறு மின்சாரசபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இது நடைமுறைகளை மீறும் செயல் என்று பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Read More

இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள்!

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள் அமைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அழகியல்கலைப் பீடம் மற்றும் சுதேச வைத்தியத்துறை பீடங்களுக்கான இரண்டு புதிய விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (25)  நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்த அமைச்சர் றிஷாத்!

யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (25) மாலை சந்தித்து நலன் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். இதன்போது திடீர் சுகவீனமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண முதலமைச்சரின் உடல் நலன் குறித்து றிஷாத் பதியுதீன் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

எம்.எச்.முஹம்மதின் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்

– ஊடகப் பிரிவு  –    மூத்த அரசியல்வாதியும், சமூக சேவையாளருமான முன்னாள் சபாநாயகர்  எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார். எம்.எச்.முஹம்மதின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,, முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர். கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அவர் கை கொடுத்து உதவியவர். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு, அக்கட்சியை வழி நடத்தியவர். பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களில்…

Read More

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் வபாத்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச்.முஹம்மத் கடுமையாக சுகயீனமுற்று இருந்த நிலையில் இன்று (26) காலை காலமானார். 1921ம் ஆண்டு பிறந்த எம்.எச். முஹம்மத், 1956ம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினூடாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் கொழும்பு மேயர், பொரளைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் , சபாநாயகர் என்று பல பதவிகளை அலங்கரித்துள்ளார். கொழும்பின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ள அவர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார…

Read More

றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்ற விரும்புகின்றேன்

– சுஐப் எம்.காசிம் – அமைச்சர் றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நேற்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா கல்லூரியில், மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அங்கஜன் எம்.பி இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான், ஜனாப் ஜமால், அல்ஹாஜ் முபீன் ஆகியோர் உட்பட உரையாற்றினர். அங்கஜன் எம்.பி கூறியதாவது,…

Read More

திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் இனி இல்லை

எதிர்வரும் காலத்தில் நகர்புற குடியிருப்புக்கள் மற்றும் கிராம புற குடியிருப்புக்கள் உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரச திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தீர்மானித்துள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகளினால் மட்டுமே நகர மற்றும் கிராமிய குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குடியிருப்புக்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டும் நிலங்கள் அரசின் மூலம் வழங்கப்படுவதுடன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் முதலீட்டாளர்கள் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்தானித்துள்ளது. இப்புதிய திட்டத்தின் மூலம் கொழும்பில்…

Read More