Headlines

சவூதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய லேபர்மினிஸ்ட்ரி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு சவுதி அரேபியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையுடன் 35 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புதிய நிர்வாக மாவட்டம்; அ.இ.ம.கா வின் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு

* தென்கிழக்குப் பிரதேசத்திற்கென புதிய நிர்வாக மாவட்டம் * வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பது போன்ற ஏற்பாடு * ஐக்கிய இலங்கைக்குள் நேர்த்தியான அதிகாரப் பகிர்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அமைப்புத்திட்ட முன் மொழிவில் சுட்டிக்காட்டு. -சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது. தென்கிழக்கு கரையோர நிர்வாக மாவட்டம், ஐக்கிய இலங்கைக்குள் சகல இனங்களையும்…

Read More

மாலைதீவு பிரஜைகள் கைது!

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியவில் உள்ள விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இடம்பெறுகின்றார். துறைமுக நகர் விவகாரம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழ்நிலை என்பவை இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களாக இந்தியா கவனத்தில் கொள்ளவுள்ளது. கடன்களுக்காக பங்குகளை விற்பணை செய்வதற்கான…

Read More

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்.!

சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க்ரட் வெல்ஸ்ட்ரோம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே அவர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முயற்சி.!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முனைகின்றன. எனினும், இந்த அரசாங்கத்தினால் இனவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

Read More

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும்  இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னார் உதயபுரம் பகுதியில் பொதுமக்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை, பேசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததை தொடர்ந்து  இன்று ஆர்ப்பாட்டம்…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக கூடாது – ஒபாமா

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார். பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ´´பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும்…

Read More

ஏழு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஐந்து புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயரிஸ்தானிகர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(22) கையளித்தனர். இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அவ்வகையில் திரு. கார்லோஸ் ஈ ஓர்லாண்டோ (Carlos E. Orlando) உருகுவே குடியரசின் தூதுவர் திரு. பிரகாத் எச். டேர்ட்லி (Parakhat H. Durdyev) துருக்மெனிக்ஸ்தான் குடியரசின் தூதுவர் திரு. குயுலோ பெத்ஓ (Gyula PethO) ஹங்கேரி நாட்டின் தூதுவர் திரு. சொசெப் டுரொபெனிக் (Zozef Drofenik) சுலோவேனியா குடியரசின் தூதுவர் திரு. நியான்கொரோ…

Read More

இளவரசர் ஜோர்ஜை சந்தித்த ஒபாமா

பிரித்தானியாவின் மூன்றாவது முடிக்குரிய இளவரசர், வில்லியம் கேத் தம்பதிகளில் மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் உரையாடும் புகைப்படம் நேற்று (22) வௌியாகியுள்ளது. லண்டனிலுள்ள கெனிங்ஸ்டன் மாளிகையில் இரவு உறங்க செல்ல முன்னர் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் ஜோர்ஜ் சந்தித்துள்ளனர். இரவுடையில் உறங்க தயாராக இளவரசர் இருக்கும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவருடைய தந்தை இளவரசர் வில்லியமும் உள்ளார். ஜேர்மனி செல்லும் வழியில் லண்டனுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி…

Read More

சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர் நியமிப்பு

கோட்டை தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக ஆர்.ஏ.டி ஜனக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனக ரணவக்க தனது நியமனக் கடிதத்தினை நேற்று (22) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Read More

மஹிந்தவின் பெயரிலும் வீட்டுத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் பெயரிலும் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Read More