Headlines

விருசர அட்டை பயனாளிகளுக்கு மேலும் நன்மைகள்

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சின் தலைமையில் விருசர அட்டை பயனாளிகளுக்கு சகல அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் துறைகளில் முன்னுரிமைகள் மற்றும் சிகிச்சைகள் (மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், கண், கர்ப்பகால மருத்துவ சோதனை உள்ளிட்ட பல சேவைகள்) வழங்கப்படவுள்ளன. இதன்பிரகாரம், அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் மேற்படி விடயம் சம்பந்தமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விருசர அட்டை பயனாளிகள் பல்வேறு வகையான சலுகைகள் மற்றும்…

Read More

அதிகாரப் பகிர்வும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் (கட்டுரை)

– எம்.ஐ.முபாறக் – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டனர். புதிய அரசமைப்பில் இருக்க வேண்டிய ஏனைய விடயங்களை விடவும் அதில் உள்ளடங்கப்போகும் அரசியல் தீர்வின் மீதுதான் சிறுபான்மை இன மக்களின் முழுக் கவனமும் உள்ளது.எப்படியாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்காக இருக்கின்றது. இந்த நாட்டின் மூவின…

Read More

வெனிசுவேலாவில் கடும் மின் தட்டுப்பாடு – வேலை நாட்கள் குறைப்பு!

வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது. மின்சாரப் பிரச்சினை தீரும் வரை அரசு ஊழியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மாத்திரமே வேலைக்கு வரவேண்டும் என துணை ஜனாதிபதி அரிஸ்டோபுலோ இஸ்துரிஸ் தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடி காரணமாக சுமார் இருபது லட்சம் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை…

Read More

பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைவு!

சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறுமுகம் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபா கணேசன் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்…

Read More

கீதா, சாலிய பதவி நீக்கம் – 11 பேருக்கு புதிய பதவிகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் –…

Read More

அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (27) புதன்கிழமை சந்தித்து  நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குப் பற்றி விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

யோஷித தொடர்பில் கடற்படை விசாரணை

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம்…

Read More

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு.!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கெண்டைனர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒரு வழி பாதையில் இடம்பெறுவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். தலவாகலையிலிருந்து கொழும்பிற்கு 12 டொன் நிறையுடைய  தேயிலை தூல் ஏற்றி சென்ற லொறியே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கினிகத்தேன 20 மைல் பகுதியில்  விபத்துக்குளாகியுள்ளது. லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரினால் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதிலும் வாகன போக்குவரத்துக்கு தடையேட்பட்டு ஒரு வழி பாதையில் வாகனங்கள் பயணிப்பதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை…

Read More

13 சட்டவிரோத ஆயுதங்கள் ஒப்படைப்பு

சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப் பகுதியினுள் இதுவரை 13 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக கடந்த 25ம் திகதி முதல் மே 6ம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் இதுவரை மாத்தளை மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், கம்பஹா மாவட்டத்தில் 7 ஆயுதங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு ஆயுதமும் கையளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ரீ…

Read More

மஹிந்தவிற்கு இடமில்லை! டிலான் பெரேரா

எதிர்காலத்தில் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை. 19ம் திருத்தச் சட்டத்திற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவும் கை உயர்த்தி சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று (27) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தெரிவுக் குழுத் தலைவராக சனத் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவராக சனத் ஜயசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு களுவித்தாரன, ரஞ்சித் மதுரசிங்க மற்றும் உபசாந்த ஆகியோர் தேர்வு குழு அங்கத்தவர்களாக நிமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனது கடமையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி பொறுப்பேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Read More

மோசடி செய்யும் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை.!

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பணத்­தினை மோசடி செய்யும் ஊழி­யர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அநு­ரா­த­புரம் சி.டி.சி. வர­வேற்பு மண்­ட­பத்தில் போக்­கு­வ­ரத்துச் சபை ஊழி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

Read More