Headlines

இன்று பிரதமர் விசேட உரை

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கூடுவதோடு 2.00 மணிக்கு பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார். அதேவேளை இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல மேலும் தெரிவிக்கையில், இன்று செவ்வாய்க்கிழமை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற…

Read More

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது. ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த நிறுவனம், தற்போது பெங்களுர் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது இந்தநிலையில் நிறுவனம், புதுடில்லி, மும்பாய், குஹாஹெட்டி, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவவுள்ளது இதன்படி இந்தியாவில் மாத்திரம் 100 கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன்…

Read More

ஆசிரியை ஒருவரை தாக்கிய அதிபர் கைது

ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர். விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார். பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆசிரியையின் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்பு தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!

– அஸ்லம் எஸ்.மௌலானா – அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார்…

Read More

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு தனிநபர் பிரேரணை

“ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, இங்கு வாழ்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்க முடியும் என்று, நான் பெரிதும் நம்புகின்றேன்” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒலுவில் மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல், அன்சாரி ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்த…

Read More

பொத்துவில் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வேன் – அமைச்சர் றிஷாத்

– கபூர் நிப்றாஸ் – அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை  வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நேற்று (2016.04.04) அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் சுகாதாரத்திலும் தற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரான பொத்துவிலுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பொத்துவிலின் பல இடங்களையும் பார்வையிட்டுவிட்டு வந்த அமைச்சர் உரையாற்றும்போது : பொத்துவிலில் பல்வேறு குறைபாடுகளை இன்று நான்…

Read More

ஓய்வு பெற்ற நீதிபதி கபூர் அ.இ.ம.கா வில் இணைந்தார்

ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரபல சட்டத்தரணியுமான கபூர் நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மாஷாஅல்லாஹ்!!!! பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்

– லியோ நிரோஷ தர்ஷன் – ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன நான்கு நாள் உத்தியோகப்பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ளளார். பன்னாடுகளின் தலைவர்களின் பங்குப்பற்றலுடன் சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

Read More

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் போர்ட் சிட்டிக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) மாலை நான்கு மணியளவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்த திட்டத்தினை எதிர்க்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போர்ட் சிட்டி திட்டத்தினை உடனே இடைநிறுத்துமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 9 அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன் ஏற்பாட்டாளர் சுஜீவ சாம்கர தெரிவித்துள்ளார்.

Read More

சிறுநீரகம் வழங்கியதை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டனர்

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், சந்தேகநபர்கள் வசமிருந்து போலி ஆவணங்கள் மற்றும் போலி சீல்கள்…

Read More

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

– சுஐப் எம்.காசிம் –  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…

Read More

வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் முறையிடலாம்

தமிழ் – சிங்­களப் புத்­தாண்டு காலத்தில் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீதி மற்றும் அவர்­களை ஏமாற்றும் வர்த்­த­கர்­களை மடக்கிப் பிடிக்க பாவ­னை­யாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அதி­கா­ர­சபை ஏப்ரல் 11 ஆம் திகதி வரை சுற்­றி­வ­ளைப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதன்­படி மொத்த, சில்­ல­றை­க­டைகள் மற்றும் களஞ்­சி­ய­சா­லை­களில் சோதனை நடத்­தவும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். பாவ­னை­யா­ளர்­களை  பண்­டிகைக் காலத்தில் ஏமாற்றும் வர்த்­த­கர்கள் அதிக விலைக்கு பொருட்­களை விற்­பனை செய்யும் வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் 011-2399149, 011–7755481 – 3  ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு…

Read More