Headlines

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாரம் மேற்­கொள்­ள­வுள்ள சீன விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்ளார். அது­மட்­டு­மன்றி பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களும் இந்த விஜ­யத்தின் போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. முத­லீ­டு­களை ஊக்­கு­வித்தல், பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு சிறு­நீ­ரக நட­மாடும் சேவை, விளை­யாட்டு கூட்­டு­றவு சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­வித்தல், தெற்கு அதி­வேக பாதைக்­கான இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தி கம்­பஹா அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடப் பகு­தி­க­ளுக்­கான நீர்­வ­ழங்கல் கடன் உடன்­ப­டிக்கை போன்­றன கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் புதன்­கி­ழமை…

Read More

இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு உடன்படிக்கை ரத்து?

இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24 பேர் அதில் பலியாகினர். இதனையடுத்து இலங்கையின் நகர அபிவிருத்தி சபை குறித்து நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யவுள்ளது. குறித்த நிறுவனத்தினால் இலங்கையில் நாலாயிரம் வீடுகள் கட்டப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாபோல நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க

வத்தளை, மாபோல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன். பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான் திட்டமிட்டிருந்தேன். எனினும், நடைபாதையை…

Read More

பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போதைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தின் பின்னர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைக்கு பான் கீ மூன்…

Read More

தென்பகுதி மீனவர்களுக்குத் தடை

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் புதிய தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவைச்…

Read More

போதைப் பொருள் வலையமைப்பின் உள் நாட்டு முகவர்களைத் தேடி வேட்டை

இலங்கையின் தென் கடல் பிராந்தியத்தில் ஈரான் கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள் கடத்தலானது இலங்கை – பாகிஸ்தான் போதைப் பொருள் வலையமைப்பொன்றினுடையது என தற்போதைய விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் இலங்கை முகவர்களைத் தேடி தற்சமயம் இரகசிய விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

Read More

வற் வரி மறு அறி­வித்தல் வரை நிறுத்­தி­வைப்பு.!

ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வி­ருந்த பெறு­மதி சேர் வரி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் கல்­யாணி தஹ­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த வரி அதி­க­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்ள விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, மறு அறி­வித்தல் வரை முன்னர் இருந்­தது போன்று 11 சதவீத­மான பெறு­மதி சேர் வரியே நடை­மு­றையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீத­மாக வரியை அறி­விடக் கூடாது…

Read More

பிரதமர் சீனாவுக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 6 ஆம் திகதி புறப்பட்டுச் செல்கின்றார். சீனப் பிரதமர் லீ கேக்கியாங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் பிரதமர் 9 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தல் வர்த்தக முதலீடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான பேச்சுவார்ததைகளில் பிரதமர் கலந்து கொள்வார்.

Read More

குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

முன்னிலை சோசலிசக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதோடு அரசியல் பழிவாங்கள் அடிபடையில் திட்டமிட்டே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதா முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயின் அரசாங்கமானது குமார் குணரட்னத்தின் குடியுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியினரினால் இன்றைய தினம் கொழும்பில்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஏற்பாட்டாளர் புபுது ஜெயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More

மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைக்க புதிய உத்தி

நாட்டில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்காக கனிய வள எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக கனிய வள எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைவடையும் என்று அமைச்சர்.

Read More

கப்பலொன்றில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

Read More