Headlines

களனி கங்கையில் நீராடச்சென்ற சிறுவன் காணவில்லை

தொம்பே, கப்புகொடை அருகில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 10 வயது பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவத்தில் காணாமல் போன சிறுவனை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளாவிய ரீதியாக பொலிஸாரால் முன்னெடுக்கபட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமாக கைதுச்செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸாரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வாகன வீபத்தில் 11 பேர் காயம்

அவிசாவளை ரண்வல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் அதற்கு எதிர் திசையில் வந்துள்ள கார் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படு காயமடைந்துள்ள காரின் சாரதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு  கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இரு நாட்டு கடற்படைகளுக்குமிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் அவை இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்காக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து

நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய மனமார பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மாட்டுவண்டி சவாரி மற்றும் யானை சவாரிக்கு தடை

சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின்போது மாட்டுவண்டி சவாரி போட்டி மற்றும் யானை சவாரி போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருக வதையை தடுக்கும் வகையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள சுற்று நிரூபத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

தென்மாகாணத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையை ஏதிர்நோக்கியுள்ளது. காலி, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், திஸ்ஸமகாராம, தனமல்வில, செல்லக்கதிர்காமம் ஆகிய பகுதிகளில் பாரிய குடிநீர் பற்றாக்குறையால் புத்தாண்டு தினத்திலும் தமது அன்றாட பணிகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

தமிழக மீனவர்களுக்கு நாளை விடுதலை

இருவேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மூன்று பேர் நாளை (13) புதன்கிழமை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மீனவர்கள் மூவரும் நாளை காலை 8.00 மணிக்கு இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார். குறித்த மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கடற்படையினரின் படகுகளை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களும் இரண்டு…

Read More

அமெரிக்காவுக்கு பறந்த கோத்தபாய!

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். எப்படியிருப்பினும், கோத்தபாயவின் மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எனினும் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் மே மாதம் முதல் வாரத்திலே இலங்கை வரவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Read More

புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம்செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும்கிடையாது. மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது எனநம்புகின்றோம். புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால்மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நுவரெலியாவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வசந்த காலத்தையொட்டி நுவரெலியா நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுவரொட்டியில், அவசர நேரங்களில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியையும், பொலிஸாரையும் 052-2222226, 052-2222223, 052-2222444, 052-2222225, 072-6534317 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வசந்தகால நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இந்த விசேட பாதுகாப்பு…

Read More

ஜெயாவின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி

இந்தியா-விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க.வின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று (11) விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று உரையாற்றினார். மிகப்பெரிய மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த…

Read More