Headlines

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிய நபர்

மஹியங்கனை – சேனார பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியை முற்றுகையிட சென்ற சந்தர்ப்பத்தில் அதனை நடத்தி சென்ற சந்தேக நபர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், இந்த சட்டவிரோத மதுபான மோசடியை முற்றுகையிட சென்ற போதே இந்த சம்பவத்திற்கு இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு,சந்தேக நபரை…

Read More

நாளை நீர் வெட்டு

மன்னார் மற்றும் முருங்கன் நகரங்களும் அவை அருகில் உள்ள பிரதேசங்களிலும் நாளை காலை 8.00 மணி முதல் 12 மணி நேரம் வரை நீர் விநியோகம் தடைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மன்னார் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன், நீர் தாங்கிகளில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த நாட்டைவிட்டு வெளியேறியமைக்கான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற வாசகம்

இலங்கையின் முன்னணி பாதணி உற்பத்தி நிறுவணமான டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவணத்தின் ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற அறபு எழுத்தை ஒத்த வடிவமைப்புக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பாதணிகள் சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளதினால் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். புதுவருடப் புத்தாண்டுக்காக செய்யப்பட்ட இப்பாதணிகளிலேயே இவ்வாறான அறபு வடிவமைப்புக்கள் காணப்பட்டுள்ளன. இப்பாதணிகள் தொடர்பில் டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவனத்திடம் முஸ்லிம்கள் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பில் தற்போது குறித்த நிறுவணம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி…

Read More

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம் காசிம் – சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (22) விஜயம் செய்தார். மன்னார் முசலி – சிலாவத்துறை பிரதேசங்களிலுள்ள அகத்திமுறிப்பு, அளக்கட்டு, பீ பீ பொற்கேணி, எஸ் பீ பொற்கேணி, வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள மக்கள்…

Read More

வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் ஒபாமா சந்திப்பு

சவுதி அரேபியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வளைகுடா நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு தொடர்ந்து உதவுமாறு கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. அதேநேரம் அணு ஆயுத உற்பத்தி செய்வதாகக் கூறி ஈரானுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வந்தது. வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிரிகள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம்!

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொது உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் இவ் விண்ணப்ப படிவ கையேட்டினைப் பெற்று விண்ணப்பிக்க முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்ப கையேட்டில் தேவையான தகவல்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்….

Read More

ஜேர்மன் நாட்டுப் பெண் பலி!

ஹிக்கடுவை சுற்றுலா விடுதி கடற்பிரசேத்தில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் (61) ஒருவர் இன்று (22) பகல் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த பெண் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் என ஹிக்கடுவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

தாஜு­தீனின் படு­கொலை : மூன்று முக்கிய நபர்கள் கைதாவர்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை விவ­கா­ரத்தில் மேலும் முக்கிய மூன்று நபர்கள் கைது செய்யப்படுவர் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று ( இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

Read More

மஹிந்தவின் அலுவலகத்திற்கருகில் ஒருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்திற்கருகில் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

FCID இல்லாதொழிக்கப்படாது –

நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (22) தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.

Read More

மீண்டும் ஈக்வேடாரில் நிலநடுக்கம்!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று (22)  மீண்டும் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து 100 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும்…

Read More