Headlines

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது  தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மின்தடையால் ஏற்பட்ட வினை

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (13) நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில், அலுமாரி,…

Read More

பாணின் விலை குறைப்பு

இன்று (14) தொடக்கம் ஒரு வாரத்திற்கு பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்த்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார். அதற்கமைய 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று முதல் ஒரு வாரத்திற்கு 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து பாணின் விலையை…

Read More

மின்சார நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு – ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார தடைக்கு நாசகார செயல்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தவேளையில் ஜனாதிபதி இந்த திடீர் உத்தரவை பிறப்பித்தள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மின்சார தடை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்தள்ளார். மின்சார தடை தொடர்பில் பல பக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 21 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட…

Read More

மத்திய மாகாண ஆளுநர் காலமானார்

இலங்கையின் மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று (14) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 76 ஆகும். சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

யோஷிதவுக்கு பிணை

– அலுவலக செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு  பிணை வழங்கப் பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த நால்வருக்கும் பிணை வழங்கியுள்ளது.

Read More

மஹிந்த நல்லவர்: ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (13) பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யார் அழுதாலும் யார் தேங்காய் உடைத்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே ஆட்சி செய்வார். இந்த அரசாங்கம் பல…

Read More

இலங்கை தேசிய கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவராக அலிகான் ஷரீப் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களால் இலங்கை தேசிய கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவராக அல்ஹாஜ் அலிகான் ஷரீப் அவர்கள் உடனடியாக செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளரும், பிரதிக்கல்விப்பணிப்பாளரும், மீள்குடியேற்றத்திற்கான அமைச்சு மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மற்றும் ,கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் இணைப்புச் செயளாலருமாக கடமையாற்றியுள்ளதுடன், மீள் குடியேற்ற அதிகார சபை இலங்கை…

Read More

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

‘புபுது இந்திக்க’ கைது

பாதாள உலகத்தைச் சேர்ந்த இந்திக்க மல்லி என்ற புபுது இந்திக்க உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ, றாகம மற்றும் ரன்தோலுகம ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பொன்சேகாவின் நியமனத்தை எதிர்த்து மற்றுமொரு மனு தாக்கல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினர் நியமித்தது செல்லுபடியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான மேஜர் அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று (11) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடாத அவரை நாடாளுமன்ற உறுப்பினரான நியமித்துள்ளதன் மூலம் அந்த கட்சி மக்களின் உரிமையை மீறியுள்ளதாக மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பலருக்கு உள்ள எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்துள்ளார். இந்த இயந்திரமானது வீட்டில் உள்ள பாவனைக்கு உதவாத கழிவு பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியின் போது இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு மட்டத்தில்…

Read More