Headlines

க.பொ.த. சா.த பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம்…

Read More

பாலஸ்தீன அகதி முகாமுக்குள் அத்துமீறி தாக்குதல் – இஸ்ரேல்அட்டூழியம்

அத்துமீறி, இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன அகதி முகாமுக்குள் நுழைந்தனர். இவ்வாறு அத்து மீறி நுழைந்த காட்டு மிராண்டி இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன ஒருவர் கொல்லப்பட்டார். இந்த அத்துமீறிய தாக்குதலில் 22-வயது பாலஸ்தின இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தரப்பில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நீதிவான் திலன பண்டாரவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

நீதிவான் திலன பண்டாரவிடம் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு அண்மையில் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரிலேயே அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு திலன பண்டாரவுக்கு விளக்கம்கோரிய கடிதத்தை நேற்று  (1) அனுப்பியுள்ளது. மொன்டிரோ ஜீப்பில் சரணாலயத்துக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாருடன் சென்ற நீதிவான், அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது.

Read More

நாளை வரு­கிறது இந்­திய நிபுணர்குழு

இலங்கை – இந்­திய பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்­பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதி­கா­ரிகள் மட்டப் பேச்சு வார்த்­தை­க­ளுக்­காக இந்­திய உயர் மட்ட குழு நாளை வியா­ழக்­கி­ழமை இலங்கை வரு­கின்­றது. இரு நாட்டு அதி­கா­ரி­களின் பங்­குப்­பற்­ற­லுடன் வெள்­ளிக்­கிழமை கொழும்பில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலங்கை, – இந்­திய கூட்டு ஒப்­பந்தம் தொடர்­பான செய­ல­மர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. இலங்கை, – இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் ஊடாக கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தாரம் மற்றும் தொழில் நுட்­பத்தை மையப்­ப­டுத்­திய கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு இணக்கம்…

Read More

யாழில் பாரிய போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் யாழில் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்நிலையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் 14பேர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று (01) செவ்­வாய்க்­கி­ழமை எட்­டா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இன்று முற்­பகல் 10 மணி­ய­ளவில் யாழ்ப்­பாண பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு முன்­பாக இக்­க­வ­ன­யீர்ப்பு…

Read More

“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…

Read More

போக்குவரத்துத் துறை மோசடிகளுக்கு கடுமையான நடவடிக்கை!

போக்குவரத்துத் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்  தெரிவிக்கையில், மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பிரிவு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பேருந்துகள் ஒரே தரிப்பிடங்களில் நிறுத்தப்படுகின்றன.அங்கு இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும்.பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும்…

Read More

இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை!

இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் குறித்த தகவலைத் தெரிவித்தார். வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20 சதவீதமானோர் மதுவால் பாதிக்கப்பட்டவர்களே. எனவே,மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் பற்றி…

Read More

ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தர் – ஞானசாரர்

இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது. மாறாக பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக கருதும்  நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை,ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத…

Read More

நோன்பு மாத­த்தில், தேர்­தலை நடாத்­த­வேண்­டாம் – ஜனாதிபதி உத்தரவு

– A.R.A. பரீல் – தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட்…

Read More